இந்திய தேசியக் காங்கிரசின் 43வது மகாசபைக் கூட்டம் 1928ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கல்கத்தாவில் கூடியது. இந்த மாநாட்டுக்குப் பிறகு விடுதலைப் போராட்டம் புது உத்வேகம் பெற்றது.
பகத்சிங்கின் வீரமரணம், சிறையில் உண்ணவிரதமிருந்து உயிர் துறந்த வீரர் யதிந்தாஸின் தியாகம், காகோரி சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு, மீரத் சதி வழக்கு, தென்னிந்திய ரயில்வே சதி வழக்கு ஆகியவை காரணமாக இந்தக் காலகட்டத்தில் இந்திய தேசிய விடுதலை இயக்கம் சூடு பிடித்து பலவித பரிமாண்ங்களுடன் விளங்யது. நாடெங்கும் பதட்ட நலை உருவாகிக் கொண்டிருந்தது.
அகில இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்திய 44வது மாநாடு 1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடியது. டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு லாகூர் நதிக்கரையில் பூடண சுதந்திரமே எங்கள் லட்சியம் என்று காங்கிரஸ் மகா சபையின் தலைவர் பண்டித ஜவகர்லால் நேரு பிரிட்டிஷ் ஆட்சியின் மீது போர்ப்பிரகடனம் செய்தார்.
இதனையொட்டி 1930ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் முதன் முதலாக பூரண சுதந்திர நாள் தேசமெங்கும் கொண்டாடப்பட்டது. பெருநகரங்கள் மட்டுமின்றி குக்கிராமங்களும் சுதந்திரதின விழாக்கோலம் பூண்டிருந்தன. இந்த நாள் இந்திய மக்களை எழுச்சியூட்டிய நாளாக அமைந்தது ஆனால் பிரிட்டிஷ் ஏகதிபத்தியத்திற்கோ எரிச்சல் ஊட்டிய நாளாக அமைந்து விட்டது.
பாரத நாடே புத்துயிர் பெற்ற இந்தத்திருநாளில், ஆங்கில மோஸ்தர் உடையகள் தரித்து, நகராட்சியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டராக தலை நிமிர்ந்து, ஜன செல்வாக்கோர்டு நின்றிருந்த பா.து. வடிவேலு அவர்கள் கோபவேசம் கொண்டார்.
தான் செய்து வந்த ரெவின்யூ இன்ஸ்பெக்டர் வேலையை உதறி தள்ளினார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
1930ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி காலையில் தாராபுரத்தில் உள்ள அனுமந்தராயன் கோயில் முன் மைதானத்தில் காங்கிரஸ் கொடியேற்றி வைத்து அந்நிய துணி பகிஷ்கரிப்பு இயக்கத்தை துவக்கினார். பெரிய சொக்கப்பானை கொளுத்தப்பட்டது. தான் அணிந்திருந்த ஆங்கில மோஸ்தர் உடைகளைக் கழற்றி அதனைக் தீயிட்டுக் கொளுத்தினார். அவரைத் தொடர்ந்து பல பிரபல வக்கில்களும், மாணவர்களும் தங்கள் அந்நியத் துணிகளை அத்தீயில் போட்டனர்.
கதர் இயக்க்ம், கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடைகளின் முன் மறியல் என்று தொடர் போராட்டங்கள் வடிவேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றன.
மெளனப் பூமியில் ஒர் எரிமலை நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது. வடிவேலு அவர்களால் எரிய விடப்பட்ட நெருப்பு மக்க்ள் மனதில் இருந்த அடிமை உணர்வைக் கருக்கியது. சுதந்திர தாகத்தைச் சுடர் விடச் செய்தது.
காங்கிரஸ் பிரச்சாரத்தில் தீவிரமாக இற்ங்கினார். கிராமங்கள் தோறும் பயணம் மேற்கொண்டார். பலதரப்பு மக்க்ளையும் சந்தித்து காங்கிரஸ் இயக்கத்துக்து ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்தார். காங்கிரஸின் இலட்சியங்களை அவர்களிடம் எடுத்துரைத்தார்.
வடிவேலு அவர்கள் அந்த மெளன பூமியில் மாவீரனாகத் தோன்றி மக்களின் அன்பைப் பெற்றார்.
பின்னூட்டமொன்றை இடுக