நடராஜமூர்த்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வலைப்பூ
திருச்சிற்றம்பலம்
ஐந்தெழுத்தருள்நிலை
http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=13&Song_idField=7025
ஆணவம், மாயை, கன்மம்
சைவ சித்தாந்த ரீதியாக –
சித்தம், மனம், புத்தி, அகங்காரம் என்பன நாலும் சேர்ந்து அந்தக் கரணம்.
சித்தம் என்பது மனத்தின் அவத்தை வேறுபாடு.
புத்தி என்பது இது இன்ன விஷயம் என்று நிச்சயிக்கும் முகத்தால் விஷயத்தில் ஊன்றி நிற்பது.
அகங்காரம் நான் இதை என்னவென்று அறிவேன் என்று நிச்சய வடிவாய் புருடனில் ஊன்றி நிற்பது.
அந்தக் கரணம் என்பதன் கூறுகளாகிய நான்கில் ஒன்று அகங்காரம்.
ஆணவம் என்பது அநாதி மலங்கள் மூன்றனுள் ஒன்று.
மும்மலம் ஆவன ஆணவம், மாயை, கன்மம்.
மாயையும், கன்மமும் உயிர்க்கு பிறகு ஒரு காலத்தில் வந்து சேருவன.
ஆணவம் என்பது ஜீவன் என்று வியவஹாரம் தொடங்கிய அன்றே பிடித்து, ஜீவன் என்பதாலேயே ஜீவனிலேயே ஏற்படும் உடன்பிறந்த மலம். –சகஜ மலம்.
ஆணவம் என்ற வார்த்தை சாதாரண புழக்கத்தில் ‘அவனுக்கு என்ன ஆணவம்!’ ‘இப்படி ஆணவம் பிடிச்சு அலையாதே!’ என்று சொலவுகளில் வந்துவிட்டது. இந்தச் சொற்களில் எல்லாம் ஆணவம் என்பது அகங்காரம், திமிர், தலைவெட்டித்தனம், தலைகனம் என்ற பொருள்களில் ஆளப்படுகின்றன.
சைவ சித்தாந்தத்துள் நுழையுங்கால் இந்தச் சாதாரண சொற்பயன்பாட்டுகளைக் கைவிடுதல் வேண்டும். அப்பொழுதுதான் சித்தாந்தம் புரியும்.
ஆணவம் என்ற சொல்லின் தோற்றம் எப்படி ஏற்பட்டது? அணுத்தன்மை உடையதாய் இருப்பது என்பது ஆணவம்.
அணுத்தன்மையுடைமை — ஆணவம். அணு என்ற வேர்ச்சொல் அடியாக ஆணவ என்ற adjectival noun form வருகிறது.
அதாவது Principle of Individuation என்ற பொருள். சிவத்துடன் ஒன்றி நின்ற நிலையோடு ஒப்பிடுங்கால் அந்த ஒன்றிய நிலையே ஆன்மாவுக்கு சொந்த இயல்பு என்னும் போது இந்த ஆன்மா என்ற பிரித்தறியப்படும் நிலை அணுத்வமாக ஆகிவிடுகிறது. அதாவது மேலும் பிரிக்க முடியாத தனித்த அடிப்படை நிலைக்கு அணு என்று பெயர். மேலை விஞ்ஞானத்தில் அறியப்படும் அணு என்பதனோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்.
இந்த ஆணவம் என்பது ஆன்மாவின் கண்ணே உடன்தோன்றியாய் எழுந்த தோஷம் அதாவது மலம். ஆன்மாவின் ஞானத்தை முற்றிலும் மறைத்து ஆன்மா எதையும் அறிய வொட்டாமலும், தன்னையும் அறியவொட்டாமலும் செய்துவிடுகிறது. எனவே இந்த ஆணவம் என்பது மிகக்கொடிய இருள்.
உலக இருளாவது பொருட்களை மறைக்கும் ஆனால் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் இந்த ஆணவமாகிய இருள் மிகவும் கொடியது. எப்படி உடன் தோன்றியாய் ஒரு மலம் இருக்கக் கூடும்? அதற்கு உதாரணம் சைவ சித்தாந்தத்தில் சொல்வது ‘செம்பினில் களிம்பு போல்’
செம்பு என்று உலோகம் தோன்றிய கணம் தொட்டே களிம்பு என்ற தோஷம் அதற்கு உண்டானாற்போலே ஆன்மா என்ற தனித்த வியவஹாரம் தோன்றிய அக்கணமே ஆணவம் என்ற மலம் அதைப் பீடித்துவிட்டது.
இந்த ஆணவத்தின் மறைப்பிலிருந்து ஜீவனை விடுவிக்கவே மற்ற மலங்கள் இரண்டும், ஆதாவது மாயை, கன்மம் ஆகிய இரண்டும் ஜீவனுக்குத் சேர்க்கப் படுகின்றன ஈசனால்.
ஆணவம் என்ற உடன் தோன்றி இருளை நீக்கும் செயலைச் செய்யும் காரணத்தால் மலம் கன்மம் இரண்டுக்கும் ஒளி என்றே கருதப்படுவன.
ஆணவம் செய்வதோ திரோதானம் — மறைப்பு.
மலம் கன்மம் செய்வதோ திரோதான நீக்கம் — மறைப்பை நீக்கல்.
எனவே ஆணவம் என்பது ஜீவனின் உள்ளதாம் நிலையில் உடன் தோன்றிய இருள்மலம்.
அகங்காரம் என்பது அந்தக்கரணம் நான்கினுள் ஒன்று.
ஆணவம் அநாதி. முத்தி நிலையிலும் அழிதல் இல்லை.
சிவஞான மாபாடியம் 4 ஆம் சூத்திரம் 2ஆம் அதிகரணம்,
‘இவ்வான்மாச் சகசமலத்தினால் உணர்வின்று என்றது’
இதனுடைய விளக்கத்தில் ஸ்ரீ மாதவ சிவஞான யோகிகளின் விளக்கத்தில் –
“ஆகந்துகமலமாகிய மாயை கன்மங்களின் நீக்குதற்குச் சகசமலம் என விசேடித்தார். எனவே மூலமலஞ் செம்பிற் களிம்புபோல வேறுகாரணமின்றித் தன்னோடுடனிற்றலின், ஆன்மாத் தானேயுணருமாறின்றிக் கருவிகளைப் பற்றிநின்றுணர்வதாயிற்று; வெவ்வேறவத்தை யுறுவதூஉமாயிற்றென விடுத்தவாறு காண்க”
என வந்துள்ளப் பகுதியைக் கற்றுத் தெளியவும்.
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்
இறைவன்
http://www.youtube.com/watch?v=vltMNkynXCA
ஆணவம்
http://www.youtube.com/watch?v=UfEJwsR2s7Y
கன்மம்
http://natarajar.blogspot.co.uk/
சைவ சமயம் – வினாவிடை
http://shaivam.org/siddhanta/shp_vinavidai.htm
Devotional speeches ….. Please visit here,
Malaysia Hindu Dharma Mamandram – Hinduism, Vedanta, Sanatana Dharma ….. Please visit here.
History of Shaivism
திருமந்திர ரகசியம் Please visit here.
Tamil Shaivite Literature – Devotional stotra on Lord siva Please visit here.
உமாபதி சிவாச்சாரியாரின் நூல்கள் Please visit here.
The Symbolism of Nataraja Please visit here.
Hindu Heritage BLOG: Please visit here.
சைவ சித்தாந்தத்தில் உயிர் கோட்பாடு இங்கே அழுத்தவும்.
Isha Kailash Manasarovar Sojourn Please visit here.
கோயில்கள் சொல்லும் தத்துவங்கள் Please visit here.
Hinduism Please visit here.
மஹோற்ச கிரியைகளும் அதன் தாற்பரியமும்
சிவன் இங்கேஅழுத்தவும்.
ஓம் நமச்சிவாய ! இங்கேஅழுத்தவும்.
சிவபுராணம் இங்கேஅழுத்தவும்.
திருக்குறளில் சைவ சித்தாந்தம் இங்கேஅழுத்தவும்.
சைவ தத்துவங்கள் இங்கேஅழுத்தவும்.
திருக்கோயில் வழிபாட்டு விதிகள்
கந்த புராணம்
பன்னிரு திருமுறைகள்
திருமுறைத்தலங்கள்
பக்திப் பாடல்கள் இங்கேஅழுத்தவும்.
கயா-சிரார்த்த நன்மைகள் இங்கேஅழுத்தவும்.
காசி வாரணாசி யாத்திரை
கயா தானம் அளிப்பதின் பலன் இங்கேஅழுத்தவும்.
சம்பிரதாய முறைப்படியான காசி வாரணாசி யாத்திரை இங்கேஅழுத்தவும்.
மஹாளய சிரார்த்த வழிபாடு இங்கேஅழுத்தவும்.
பிதுருதர்ப்பணம் செய்ய உகந்த காலங்கள்
சைவசமயமும் சாமியார்களூம் இங்கேஅழுத்தவும்.
Vegetarianism: Recommended in Vedic Scripture
Please visit here.
சைவ சமயப் பக்தி இலக்கியம் Please visit here.
அபிராமி அந்தாதி Please visit here.
அய்யப்பனின் அறுபடை வீடுகள் Please visit here.
அர்த்தமுள்ள இந்துமதம் Please visit here.
ஆனித் திருமஞ்சனம் Please visit here.
இந்து சமய விரதங்கள் இங்கே அழுத்தவும்.
இறை வழிபாடும் ஆலய தரிசனமும் Please visit here.
உடலெனும் பிரபஞ்சம் இங்கே அழுத்தவும்.
உருத்திராட்சம் Please visit here.
ஒல்லாந்தர் கால நூல்கள்
புலியூரந்தாதி
சந்தான தீபிகை
தண்டிகைக் கனகராயன் பள்ளு
சிவகாமியம்மை துதி Please visit here.
ஓம் நமச்சிவாய இங்கே அழுத்தவும்.
கல்வெட்டுக் கூறும் ஆலய வழிபாடு
இங்கே அழுத்தவும்.
சூரிய நமஸ்காரம் இங்கே அழுத்தவும்.
செயற்கை கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் – திரு நள்ளாறு சனி பகவான்
இங்கே அழுத்தவும்.
சைவத் திருமணச் சடங்கு Please visit here.
சைவம்- ஆன்மிகம் Please visit here.
ஞானப் பள்ளு (போர்த்துக்கேயர் கால நூல்கள்) Please visit here.
திருக்குறள் Please visit here.
நக்கீரர் தவம் செய்த அன்று ….. இங்கே அழுத்தவும்.
மஞ்சள்,குங்குமம்,சந்தனம் Please visit here.
வலம்புரி சங்கு Please visit here.
வாழும் கலையும் சைவ சித்தாந்தமும் இங்கே அழுத்தவும்.
விபூதி
Meaning of Viboothi, Thiruneeru by Various Authors |
|
தெய்வீகத்தில் ஒரு விதி உடைந்தால் அது இன்னொரு விதியைக் காட்டும் இங்கே அழுத்தவும்.
திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார்
இங்கே அழுத்தவும்.
சரியை, கிரியை, யோகம் மற்றும் ஞானம் இங்கே அழுத்தவும்.
இறை இன்பத்தின் (சிவானந்தத்தின்) நிலை இங்கே அழுத்தவும்.
இறைவனிடம் வரம்பெற இங்கே அழுத்தவும்.
இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் இங்கே அழுத்தவும்.
கணபதி – முருகன் – சிவன் இங்கே அழுத்தவும்.
சிவனடியார்க்குரிய இலக்கணங்கள்
இங்கே அழுத்தவும்.
சிவபுராணம் இங்கே அழுத்தவும்.
சைவ சமயம் இங்கே அழுத்தவும்.
சைவ சமயம் இங்கே அழுத்தவும்.
சைவ வினாவிடை இங்கே அழுத்தவும்.
சைவம் வளர்த்த தமிழ் இலக்கியங்கள் இங்கே அழுத்தவும்.
திருக்கார்த்திகைத் திருநாள் இங்கே அழுத்தவும்.
திருக்குறளில் சைவ சித்தாந்தம் இங்கே அழுத்தவும்.
திருக்கோயில் வழிபாட்டு விதிகள் இங்கே அழுத்தவும்.
பஞ்சபூத சிவதலங்கள் இங்கே அழுத்தவும்.
பஞ்சபூத தலங்கள் இங்கே அழுத்தவும்.
பிரகதீஸ்வரம் – ஒரு விஸ்வரூபம்
மன இருள் அகற்றும் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் Please visit here.
மனித சக்தி மகத்தான சக்திஇங்கே அழுத்தவும்.
விபூதி………..
சைவபூஷண சந்திரிகை
யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி சைவசித்தாந்த மகாசரபம் நா.கதிரைவேற் பிள்ளை இயற்றியது
இந்த நூலிலே மேற்கோளாகக் காட்டப்பட்ட நூல்கள்
1. தேவாரம் 18. அத்தியாத்ம இராமாயணம்
2. திருவாசகம் 19. மகாபாரதம்
3. திருப்பல்லாண்டு 20. சூரசங்கிதை
4. பஸ்மசாபாலவுபநிடதம் 21. மானவசங்கிதை
5. பராசரஸ்மிருதி 22. உபதேசகாண்டம்
6. சைவபுராணம் 23. பிரமோத்தரகாண்டம்
7. இலிங்கபுராணம் 24. சிவதருமோத்தரம்
8. கூர்மபுராணம் 25. வாயுசங்கிதை
9. கந்தபுராணம் 26. அகத்திய பக்தவிலாசம்
10. பெரிய புராணம் 27. சைவசமயநெறி
11. தணிகைப்புராணம் 28. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடல்
12. பேரூர்ப்புராணம் 29. திருப்போரூர்ச் சந்நிதி முறை
13. திருவிரிஞ்சைப்புராணம் 30. உருத்திராக்க விசிட்டம்
14. சிவஞானபோதம் 31. சடகோபர் திருவாய்மொழி
15. சிந்தாந்தசிகாமணி 32. பேயாழ்வார் மூன்றாந் திருவந்தாதி
16. சூதசங்கிதை 33. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
17. அத்தியாத்ம இராமாயணம்
பதிப்புரை
சிறப்புக் கவி
மொழிபணியு மேன்ற நாதன். (1)
னுளதாகி வைப்பார் வைகுங்
கருநீற்றவ் வருளூற்றவ் விழிபூற்றின்
வயிற்றோன்றிக் கருணை மேனி
யுருவேற்று வினைநீற்றுந் திருநீற்றின்
விழிமணியி னுண்மை யோர்ந்து
வுருவேற்றி மலம்பாற்றித் திருவேற்கும்
பெருங்கருணை யுலகத் தாக. (2)
சிறக்குமணி மெய்மை சான்ற
கண்மணியிற் றிருநீற்றிற் களிக்குமணி
குவளையணி களமராமெங்
கண்மனிவேற் பிள்ளைதவத் தணுமாசி
லாமணியுங் கருதிக் கேட்ப
வண்மணிசை வப்பெரியோ ரணியுமணி
நிலவவுஞற் றிட்டான் மாதோ.
க்லைபலவு மறிந்தோன் மெய்கண்
டன்னவனெம் மவர்க்கருளுஞ் சிவஞான
போதமுத லறிவு நூல்கண்
முன்னவன்பிற் றெரிந்துபோ திப்பவனஞ்
சிவகுகனை முன்னுந் தாசன்
நன்னமா யாவாத கோளரிநங்
கதிரைவே னாவல் லோனே.
உ
சிவமயம்
சைவபூஷண சந்திரிகை
காப்பு
போதசிவ சித்தாந்த பூடணவொண் மைக்கருளு
மீரா யிரமருப்பி யேறிவிளை யாட்டருளு
மோரா யிரமருப்பி யோர்.
தவஞால முதலுலகை மூவினையிற் கொண்டவன்யார் தாணு வாகி
அவஞானத் தவர்க்கறியா வண்ணலெவன் றிருநீறு மக்கந் தானுந்
தவஞானக் கொருகுறியாத் தந்தவன்யா ரவன்சரணந் தலைமேற் கொள்வாம்.
வருமானை முகத்தானைத் துணையானை யயில்பிடித்த வலத்தான் றன்னைப்
பெருமானை யெனதுளக்காட்டமர்வானை யெமக்கருளைப் பெருக்கு வானைத்
தருவானைப் பெரும்புதுச்சந் நிதியானைச் சாவணனைச் சார்ந்து வாழ்வாம்.
பெத்தாந்தக் கணத்தவர்க்கு மெவ்வெவர்க்கும் பெருவாழ்வு பெருக்கி மும்மைக்
கொத்தாந்த மலமுருக்குங் குறிகாட்டி நித்தியமாய்க் கொண்டார்க் குற்ற
பித்தாந்த மதப்பிணியைத் தபுமருந்தாந் திருநீற்றைப் பேணியுய்வாம்
தலையொளிகான் றியாம்பிரம மெனத்தடுமா றும்மிருள்கடங்கா தோட்டி
விலைமதித்தற் கரியதுவாய் வேண்டுவார் வேண்டியன விழைவி னீந்து
மலைமகணா யகன்றிருக்க ணருட்பேற்றைக் குறிக்கவரு மணியைத் தாழ்வாம்.
நூல்
முருவுடலிற் கண்டியு நீறும்.
வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
மாலற நேய மலிந்தவர் வேடமு
மாலயனுந் தானு மரனனெத் தொழுமே.”
போலும்பொடியணிமார்பிலங்குமென்றுபுண்ணியர்போற்றிசைப்ப.
– திருப்பல்லாண்டு.
நோதறுசேர்மன்றேவிநல்வடிவாங்கொழுஞ்சுடரழலிடைப்பட்ட
வேதமினீற்றையெமதுமெய்யணிவோ மெறிதிரைக்கருங்கடலுடுத்த
தீதிலாவுலகநீற்றினையணிந்தேதீர்த்திடுந்தீவினைச்சிமிழ்ப்பே.
-இலிங்கப்புராணம்.
கோலமட வாரியக்கர் கந்தருவ ரரக்கர்குல வசுரர் வேதச்
சீலமுனி வரர்மற்றோ ரிவருளருந் தவமுடையீர் திருவெண்ணீறு
சாலவுமுத்தூளனமுப்புண்டரநாடொரும்போற்றித்தரியார்யாரே.
-சூதசங்கிதை.
கோதிலா மனுமுறைக் கொற்ற வேந்தனே
பாதியாள் சத்திபத் தினியின் வைகுற
வேதிலா ணவந்தபு மிணையில் வேதியன்.
கேழிலா மண்டபங் கேழ்த்த வேதிகை
யாழிசூழ் புலியலி யரிமெய் யாதியா
வாழிமா மெய்மைவண் பசுக்க ளாலியா.
பொற்றநீள் விழியெரி புணர்த்து வேள்விசெய்
தற்றமில் வேள்வியி லவிர்வெண் பூதியைப்
பற்றற வுயிர்க்கெலாம் படிவத் தாக்கினான்.
மிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்
வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்குந்
தகைநல மளிப்பது தவள நீறரோ.
பண் – காந்தாரம்
திருச்சிற்றம்பலம்.
சுந்தரமாவதுநீறு துதிக்கப்படுவதுநீறு
தந்திரமாவதுநீறு சமயத்திலுள்ளதுநீறு
செந்துவர்வாயுமைபங்கன் றிருவாலவாயான்றிருநீறே. (1)
போதந்தருவதுநீறு புன்மைதவிர்ப்பதுநீறு
வோதத்தகுவதுநீறு வுண்மையிலுள்ளதுநீறு
சீதப்புனல்வயல்சூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே (2)
சத்தியமாவதுநீறு தக்கோர்புகழ்வதுநீறு
பத்திதருவதுநீறு பாவலினியதுநீறு
சித்திதருவதுநீறு திருவாலவாயான்றிருநீறே` (3)
பேணியணிபவர்க்கெல்லாம் பெருமைகொடுப்பதுநீறு
மாணந்தகைவதுநீறு மதியைத்தருவதுநீறு
சேணந்தருவதுநீறுதிரு வாலவாயான்றிருநீறே (4)
பேசவினியதுநீறு பெருந்தவத்தோர்களுக்கெல்லா
மாசைகொடுப்பதுநீறு வந்தமதாவதுநீறு
தேசம்புகழ்வதுநீறு திருவாலவாயான்றிருநீறே. (5)
வருத்தந்தணிப்பதுநீறு வானமளிப்பதுநீறு
பொருத்தமாவதுநீறு புண்ணியர்பூசும்வெண்ணீறு
திருத்தகுமாளிகைசூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே (6)
பயிலப்படுவதுநீறு பாக்கியமாவதுநீறு
துயிலைத்தடுப்பதுநீறு சுத்தமதாவதுநீறு
வயிலைப்பொலிதருசூலத் தாலவாயான்றிருநீறே. (7)
பராவணமாவதுநீறு பாவமறுப்பதுநீறு
தராவணமாவதுநீறு தத்துவமாவதுநீறு
வராவணங்குந்திருமேனி யாலவாயான்றிருநீறே (8)
மேலுறைதேவர்கடங்கண் மெய்யதுவெண்பொடிநீறு
வேலவுடம்பிடர்தீர்க்கு மின்பந்தருவதுநீறு
வாலமதுண்டமிடற்றெம் மாலவாயான்றிருநீறே (9)
கண்டிகைப்பிப்பதுநீறு கருதவினியதுநீறு
வெண்டிசைப்பட்டபொருளா ரேத்துந்தகையதுநீறு
வண்டத்தவர்பணிந்தேத்து மாலவாயான்றிருநீறே. (10)
போற்றிப்புகலிநிலாவும் பூசுரன்ஞானசம்பந்தன்
தேற்றித்தென்னனுடலுற்ற தீப்பிணியாயினதீரச்
சாற்றியபாடல்கள்பத்தும் வல்லவர்நல்லவர்தாமே. (11)
(1) மந்திரம் – மந் – நினைப்பவனை, திர – காப்பது, நீறு – பாவங்களையெல்லாம் நீறாக்குவது. தந்திரம் – சிவாகமம். செந்துவர் – செந்நிறமுடைய பலளம். (2) போதம் – ஞானத்தெளிவு (3) சித்தி – அணிமா முதலிய அட்டமாசித்திகள். (6) அருத்தம் – மெய்ப்பொருள். (7) எயிலது – எயில் – மும்மதில். அது – பகுதிப்பொருள் விகுதி. அட்டது – அழித்தது. அயில் – கூர்மை (8) இராவணன் – அழுதலைச் செய்தவன், இலங்கையரசன். பரா – பரையின், வணம் – வடிவம். (10) குண்டிகைக்கையர் – சமணர், சாக்கியர் – புத்தர், கண்திகைப்பிப்பது என்க. (11) அடல் – வெற்றி. புகலி – சீகாழி. தென்னன் – கூன்பாண்டியன்.
to be continued for more details www.geocities.com/kathirvelpillai<pasupathi.k.pillai…com> wrote:
—– Original Message —–From: sivakalainataraja
Sent: Tuesday, February 14, 2006 1:21 PM
Subject: [saivaneri] any separate rules for women applaying viputhi(thirunir)
namashivaya.iam saivite, i like to know any special or individual
method of apply viputhi for women? now iam applaying viputhi(mixed
with some water) on my fore head , neck, and three parts of my
hands.. some of them says women can’t wear viputhi mixed with water??
is it correct? if any body knows the rules of applay viputhi please
reply to me. i am also want to know how many places(on body) can
women took viputhi. if there was any book recarding this, please sent
the name and publisher. sivakalai
தரிக்கக்கூடாத விபூதிகள்
ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீ¨க்ஷ யில்லாதவர் கொடுத்த விபூதியும், கருநிறவிபூதியும், செந்நிற விபூதியும், பொன்னிற விபூதியும், புகைநிற விபூதியுந் தரிக்கலாகாது. சிவதீ¨க்ஷ யில்லார் கொண்டுவந்த விபூதிப் பிரசாதத்தை யொருபாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புட்பங்களால் அருச்சித்து நமஸ்காரஞ் செய்து எடுத்துத் தரித்தல் வேண்டும். தீ¨க்ஷ முதலியவற்றால் தம்மினின்றும் உயர்ந்தவரா யிருப்பின் அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல்வேண்டும். ஆசாரியராயின் மூன்று அல்லது ஐந்துதரம் நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு வாங்கித் தரித்து பின்னரும் நமஸ்கரிக்க வேண்டும்.
தரிக்கும் நியமம்
5.நிரிக்ஷணமாவது சந்திரன், சூரியன், அக்கினி யென்னு மூவரும்முறையே வலக்கண்ணும், இடக்கண்ணும், நெற்றிக்கண்ணு மாவராதலால், வலக்கண்ணினாலே அதனை உலர்த்தினதாகவும், நெற்றிக்கண்ணினாலே தகித்ததாகவும், இடக்கண்ணினாலே அமுதங் கொண்டு நனைப்பதாகவும் பாவிப்பது. புரோக்கணமாவது அங்ஙனம் நிரீக்கணஞ் செய்யப்பட்டது சுத்தியாதற் பொருட்டுத் தெளிப்பதாம். தாளத்திரயமாவது ஒருவன் கல்லையடிக்கும் போது அதனிடத்துப் பொறிதோன்றுமாறு போலச் சடமாகிய இந்தப் பதார்த்தத்தினிடத்துச் சித்துண்டாதற் பொருட்டுத் தட்டுவதாம். அப்பியுக்கணமாவது அந்தப் பதார்த்தத்தினிடத்துத் தோன்றிய சித்தினது பிரகாசமானது தன்னுடைய தானத்தைவிட்டு நீங்காமல் இருக்கும் பொருட்டு மூடுவதாம்.
சஅஸ்திர சந்தியோபானம்
அதன் பின்னர் ஓம் அஸ்திராயநம என்று நிமிர்த்திப் பதாகை முத்திரையினாலே சலத்துளியை மூன்றுதரஞ் சிரசின்மேலே தெளித்து, ஓம் அஸ்திராய சுவாகா என்று மூன்றுதரந் தருப்பனஞ் செய்து, ஓம் அஸ்திராய நம என்று பத்துத்தரஞ் செபித்து, ஓம் அஸ்திராய சுவாகா என்று மீட்டும் ஒருதரம் தருப்பனஞ் செய்க.
ஆசமனம்
திருநீற்றின் அளவு
விபூதிசுத்தி
விபூதி ஸ்நானம்
அங்ஙனஞ் செய்த பின்பு, வலக்கையின் பெருவிரல் அணிவிரல்களால் விபூதித் தூளியை எடுத்து, ஓம் அஸ்திராய படு என்று தலை தொடங்கிக் காலளவும்பூசி, இடக்கையிலுள்ள விபூதியைப் பெருவிரலோடு கூடிய நடுவிரலினால் ஓம் இருதயாய நம என்று நீர்விட்டு, ஓம் கவசாயவெளஷடு என்று குழைத்து நடுவிரல் மூன்றினாலும், ஓம் ஈசானாயநம என்று உச்சியில் மூன்றுதரமும், ஓம் தற்புருடாயந்ம என்று நெற்றியில் மூன்றுதரமும், ஓம் அகோராய நம என்று நெஞ்சினில் மூன்றுதரமும், ஓம் வாமதேவாயநம என்று நாபியில் ஒரு தரமும், ஓம் சத்தியோசாதாய நம என்று முறையே வலமுழந்தாள், இடமுழந்தாள், வலப்புயம், இடப்புயம், வலமுழங்கை, இடமுழங்கை, வலமணிக்கட்டு, இடமணிக்கட்டு, வலவிலாப்புறம், இடவிலாப்புறம், முதுகு, கழுத்து என்னுமற்றை யிடங்களில் ஒவ்வொரு தரமுந் தரிக்கக்கடவர்.
சிலர் சுவத்திகாசனமாக இருந்துகொண்டு, ஆசமனஞ் செய்து, விபூதியைக் கையில் வைத்துக்கொண்டு,
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தநம்
உர்வாருக மிவபந்தனான் முர்த்யோர் முக்ஷ£யமாமி.
என்னு மந்திரத்தைச் சொல்லிச் சலம் விட்டுக் குழைத்து,
ஓம் சத்யோசாதம் பிரபத்யாமி சத்யோஜாதாயவை நமோநம:
பவேபவே நாதிபவே பவஸ்வமாம் பவோத் பவாயநம:
வாமதேவாய நமோ ஜேஷ்டாய நமஸ்ரேஷ்டாய நமோ ருத்திராய நம:
காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாயநமோ
பலாயநமோ பலப்ரமதனாயநமஸ் ஸர்வபூத தமனாயநமோ மனோன்மனாயநம:
அகோரேப்யோத கோரோப்யோ கோரகோரதரேப்ய: ஸர்வேப்ய:
ஸர்வசர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய:,
தத்புருஷாய வித்மஹே மஹோதேவாய தீமஹீ தந்நோருத்ராய பிரசோதயாத்
ஈசானஸ் ஸர்வவித்யானாம் ஈஸ்வரஸ் ஸர்வபூதானாம்
ப்ரம்ஹாதிபதி ப்ரஹமணாதிபதி ப்ரம்ஹாசிவோமே
அஸ்து ஸதாசிவோம்.
என்னு மந்திரங்களைச் சொல்லித் தரிப்பவருமுளர்.
இங்ஙனம் நடுவிரல் மூன்றானுந் தரிக்குந் திரிபுண்டாம் திருநீற்றுமுத்திரையெனப் பெயர் பெறும். இதுவன்றிப் பெருவிரல், நடுவிரல், ஆழிவிரல் என்னு மூன்றாணுந் தரிப்பதே விசேடமாம். தரிக்கின் மகாபாதகங்கள் சூரியனைக்கண்ட பனிபோல் அகலுமென்க. அதனை அநுலோமப் பிரதிலோமம் என்று கூறுவர். மூன்று குறிகளின் இடைவெளி ஒவ்வோரங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றையொன்று தீண்டினும், மிக அகன்றிருப்பினும், வளைந்திருப்பினும் இடையில்லா விட்டாலும் குற்றமென்றறிக. திரிபுண்டாம் விதித்த நீளத்தினின்றுங் குறைவுறுமாயின் ஆயுள் குன்றும்; மிகுமாயின் தவங்கெடும். செம்பு, வெள்ளி முதலிய உலோகங்களினாலே திரிசூலஞ் செய்து, அதனாலுந் தோள் முதலாய தானங்களில் விபூதி தரிப்பதுமுண்டு. அங்ஙனந் தரிப்பவர் சிவலோகத்திலே ஒருகாலும் நீங்காது வாழ்ந்திருப்பார்கள். மற்றைய அவசிய காலங்களிற் றரிப்பவரும், நோயாளரும் "சிவசிவ" என்று நெற்றி முதலிய தானங்களிற் றரிக்கக்கடவர். தரிக்குங் காலத்து நிலத்திலே சிந்தாவண்ணந் தரிக்க. எத்தனை யணுக்கள் பூமியில் விழுகின்றனவோ அத்தனை வருடம் இரெளரவ நரகத்தில் வருந்துவர். வாயைத்திறந்து கொண்டும், தலையசைத்துக் கொண்டும், பிறருடன் பேசிக்கொண்டும், பராமுகஞ் செய்துகொண்டும், சிரித்துக் கொண்டும், நடந்துகொண்டும், தலையைக் கவிழ்த்துக் கொண்டும், கண்ணாடி பார்த்துக் கொண்டுந் தரித்தல் குற்றமாம். ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனும் அணியற்க. நிலத்திலே யொருகால் விபூதி சிந்துமாயின் அதனை யெடுத்து விட்டு அவ்விடத்தைச் சலத்தால் மெழுகவேண்டும் இங்ஙனந் தரித்த பின்னர்ச் செய்ய வேண்டியவற்றை யெல்லாஞ் செய்து கொள்ளக்கடவர். அக்கினியின்றி யாகம் நடவாவதது போல விபூதியின்றிச் சிவார்ச்சனை நடவாது. விபூதியிடாதவர் முகத்தைக் கண்டால் நல்லோர் பஞ்சாக்ஷர மந்திரம் நூறுருச் செபிக்கக்கடவர்.
அருமறை வேள்விக்கனலி னீறெடுத்துப்
பிரணவத்தை யமைய வோதி
யுரைபெறு பஞ்சப்பிரமத்தா லுச்சி
நெற்றி யுரங்குய்யந் தாள்கள்
வரன்முறை யேயினி தணிந்து
பிரணவத்தாலுடன் முழுதும் வயங்கமண்ணி
விரிதுகில் வேறொன்றணிந்து விளங்கு
மறைமந்திரங்கள் விளம்ப வேண்டும்.
-இலிங்கபுராணம்.
விபூதியைச் சாபால வுபநிடதத்திற் கூறப்பட்ட மந்திரங்களினால் உத்தூளனமாகத் தரித்துக் கொண்டு, பஞ்சப் பிரம முதலிய மந்திரங்களினாற் றிரியக்கு திரிபுண்டரமாக ஐந்து தானங்களிற் றரிப்பதுமுண்டு. நால்வகை ஆச்சிரமத்தாருள் பிரமசாரி மேதாவி முதலிய மந்திரங்களையும், சந்நியாசி பிரணவ மந்திரத்தையும் உச்சரித்து ஓர்கால் திரிபுண்டரம் அணியினும் அணியலாம்.
மேதாவிமுதன்மனுக்களாற்பிரமசாரிமெய்ப்பிரணவத்தா
லோதார்வமுறச்சந்நியாசியுமுப்புண்டரநன்குறுத்தல்வேண்டும்.
-சூதசங்கிதை.
for more details
www.geocities.com/kathirvelpillai
விபூதியாற் பயனடைந்தவர்.
திருநீற்றை இகழ்ந்த வங்கதேச ராசனாகிய புயபலன் என்பவன் தன் அரசாட்சியையும் மனைவியையுமிழந்து ஐயமேற்றுப் பின், பிராமணோத்தமரால் திருநீறிடப் பெற்றுப் பகைவரையும் வென்று, மனைவியையும் அரசியலையும் பெற்றனன். காஸ்மீர தேசத்திலிருந்த சுதர்மன் என்னும் பிராமணனும், அவன் தம்பியும் பிரம விஷ்ணுக்களைக் கடிந்து பேசியதனால் அவர்கள் ஊமையாகவும் முடவனாகவும் சாபமிட, அதனை விபூதிகொண்டு ததீசிமுனிவர் போக்கி நற்கதி யடைவித்தனர். நாரண மூர்த்தி இவ்விபூதியைத் தரித்து ஞானத்தை யடைந்ததன்றிப் பிரமனாகிய புத்திரனையும் பெற்றனர். திரிபுர மழிக்கு நிமித்தம் தேர்ச்சாரதியாக நின்ற பிரமன் சரசுவதி தேவியின் பிரிவை யாற்றதவனாய் இரங்கி வருந்த, எம்பரமன் பாரதி வடிவாய் நின்று பாண்டரங்கக் கூத்தாடி விபூதியை அவன் நெற்றியிலிட்டு மயக்கத்தைப் போக்கி யருளினர். சர்ப்பன், பஞ்சமேட்டி, அக்கினி யென்னு மூன்றசுரர்கள் தேவர்களை யெல்லாங் கொல்ல, வீரபத்திரக் கடவுள் அவ்விடத்துச் சென்று விபூதியைத் தூவி யவர்களை யெழுப்பினர். வாமதேவ முனிவரைக் கொல்வான் பிடித்த பிரமராக்கத னொருவன் அவரது திருநீறு பரவப் பூசிய தேக பரிசத்தினால் நல்லறிவும் திவ்விய தேகமும் பெற்றான். பரதார கமனத்தினால் துர்மரணமடைந்து நரகத்தின் மூழ்கிய பிராமணன் தன் பிரேதவுடலில் விபூதி பட்டதனால் சுவர்க்கத்தை யடைந்தனன். பின்னர்ச் சிவலோக முத்தியுங் கிடைக்கப்பெற்றனன். கவுணிய குலதீபமாய், தவ முதல்வராய், சமயகுரவராய் விளங்கிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் கூன்பாண்டியனது வெப்பு நோயைத் திருநீற்றினாற் றீர்த்தருளினர். முழுநீறு பூசிய முனிவர் எண்ணிறந்தோர் சிவசாயுச்சிய முத்தியை யடைந்தனர் என்று பெரியபுராணம், அகத்திய பக்தவிலாசம் முதலிய உண்மை நூல்கள் முழங்குகின்றன. விபூதி தரித்த பேற்றினாலே இம்மை மறுமைப் பயனை யடைந்தவர்களின் தொகையை அளவிட்டறிதல் யாவர்க்கும் அரிதரிதேயாம்.
விபூதி தூஷண மறுப்பு
சிலர், அந்தண சாதியிற் பிறந்துஞ் சிவசின்னமாகிய விபூதி ருத்திராக்கங்களை யிகழ்ந்து கோபி சந்தனமிட்டும், வாயில் மண்ணிட்ட மாயனைப் ப்ரம்பொருளாக மதித்து நெற்றியில் ஊர்த்துவபுண்டரமாகிய மண்ணையிட்டும், வேதாகம விரோதிகளாய், சிவநிந்தகராய், சிவனடியார் தூஷணராய், சிவசின்ன தூஷணராய் அதிபாதகத்திற்கு ஆளாகின்றனர். அந்தந்தோ! அவரறியாமைக்கென் செய்வோம். அவர்கள் சிவபெருமானை யிகழ்ந்து தக்கன் செய்த யாகத்திற் சேர்ந்து முன்னர்க் காலத்தில் விலாப்புடைக்க அவிப் பாகங்களை உண்ட பாவங் காரணமாகத் ததீசி மகாமுனிவர் இட்ட சாபத்தினாற் பூமியிற் பிறந்த சிவதூஷண சிவசமய தூஷண சிவதாச தூஷண சிவசின்ன தூஷண சிவாகம தூஷண அதிபாதகராய்ப் பிறந்த பாஷண்டர் வம்சத்திற் நிற்க, இவ்வுண்மைகளை யெல்லாம் அறியாத கிறிஸ்தவர்கள் “மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா” என்றும், “இலந்தைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோக்ஷத்தைக் கொடுக்குமா” என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்தடிகள் முதலாயினோரே “நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன” என்றின்னன போன்ற வாக்கியங்களால் நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசனமில்லை யென்றுங் கூறியிருக்கின்றனர் என்றும், நம்மவர்களை மருட்டித் திரிகின்றனர். அக்கிறஸ்தவர்கள் தமது பைபிலில் கூறப்பட்ட வாசகங்களையெல்லாம் மறந்து இவ்வாறு கூறுதல் பொருந்துமா? ஆகலால் சைவசமயிகள் யாவரும்பின் வருவனவற்றைக் கேட்டு அவர் தூஷணங்களை நிராகரித்தல் முக்கிய கடமையாம். அக்கிறிஸ்தவர்களது பைபில் நீற்றை யணியவேண்டும் எனவும், தேவனது முத்திரைகளைத் தரிக்கவேண்டும் எனவும், அவற்றாற் பாவம் நீங்கப்படும் எனவும் கூறுகின்றன. அவை வருமாறு:-
விபூதி தத்துவம்
பசுவின் மலத்தை அக்கினிகொண்டு தகித்தலால் உண்டாகியது திருநீறெனலால், அதனுண்மையை யறியுமிடத்து ஞானம் பயக்கு மென்பது விளங்கும். எங்ஙனமெனில் பசு என்பதற்குப் பந்திக்கப்படுவது என்பது பொருள். எனவே பசு என்பதனால் ஆணவம் கன்மம் மாயை யென்னு மும்மலங்களானும் பந்திக்கப்பட்ட ஆன்மா என்பது குறிக்கப்படும். அதன் மலமாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் சிவஞானமாகிய அக்கினி கொண்டு தகித்தலால் உண்டாகுஞ் சிவத்துவப் பேற்றைத் தரிப்பவர் யாவரோ அவர் முத்தியடைவார் என்னுமுண்மையும் அறியப்படும். அன்றியும் நேராக வருகின்ற கங்கையைப் போல விளங்கும்படி வெண்ணிற முடைத்தாக நெற்றியினிடத்திற் றிரிபுண்டரமாக (முக்குறியாகத்) தரித்திருக்கும் விபூதியானது, காமம் வெகுளி மயக்கம் என்னு முக்குற்றங்களையும், சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னு முக்குணங்களையுங் கெடுத்து, ஞானவெற்றி யுண்டாக உயர்த்தப்பட்ட மூன்றுகொடிகள் போலவும் விளங்காநிற்கும், இவையன்றிச் சகசீவபரம் என்னுந் திரிபுடிகளையும், உலகவீடணை, தனவீடணை, புத்திர வீடணை என்னும் ஈடணாத்திரவியங்களையும், பிராரத்துவம், சஞ்சிதம் ஆகாமியம் என்னும் முவினைகளையும், சந்தேகம் விபரீதம் மயக்கம் என்னும் மூன்றுபுத்திகளையும், தூலம் சூக்குமம் காரணம் என்னும் மூவுடம்புகளையும், சரியை கிரியை யோகம் என்னும் முச்சாதனங்களையும், மேல் கீழ் மத்தி என்னும் மூவுலகங்களையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலத்தையும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூவிடச் சுட்டினையும், சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி யென்னும் மூன்றவத்தைகளையும், பிரமலோகம், விஷ்ணுலோகம் உருத்திரலோகம் என்னும் முப்பதவிகளையும், சிவசாலோக்கியம் சிவசாமீப்பியம் சிவசாரூப்பியம் என்னு மும்முத்திகளையும், காலம் தேசம் வஸ்து என்னும் முப் பரிச்சேதங்களையும், செய்தல் செய்வித்தல் உடன்படல் என்னும் பாவபுண்ணிய வழக்கம் மூன்றனையும், வாதம் பித்தம் சிலேத்துமம் என்னும் முப்பிணிகளையும், சுசாதிகம் விசாதிகம் சுகதம் என்னும் முப்பேதங்களையும், மனம் வாக்கு காயம் என்னுந் திரிகரணங்களையும், உத்தேசம் இலக்கணம் பரீக்கை என்னும் போதப் பிரகாரங்களையும், அம்மை இம்மை உம்மை என்னும் முப்பிறப்பினையும்நீக்கி நின்று மேல்நிலையாய பெரும்பேற்றைத் தெரிவிக்குங் குறி என்று தெளியவும்படும்.
உற்று நேரென வருந்திரி பதகை போலொளிர்
நெற்றி மேலவ ரிடுந்திரி புண்டர நீறு
குற்ற மூன்றையுங் குணமொரு மூன்றையுங் குலைத்து
வெற்றி யாகவே யுயர்த்தமுப் பதாகைபோல் விளங்கும்.
-திருவிரிஞ்சைப் புராணம்
ஆதி பகவன் ஞான வடிவழலிற் பூத்து நித்தியமா
யணிந்தோர் தமக்கு வசிகரமா யருந்தினோர்கட் காரமுதாய்
நீதி யறியும் பசுமலத்தை நீக்குமொருநற் குறிகாட்டி
நிகழ் பேரின்பக் கடலூட்டி நின்ற புகழ்வெண் டிருநீறே.
-திருப்போரூர்ச் சந்நிதிமுறை.
விபூதி இயல் இங்கேஅழுத்தவும்.
தர்ப்பை புல் இங்கே அழூத்தவும்.
வில்வம் இங்கே அழுத்தவும்.
சிவனுக்கு மிக உகந்தது வில்வம் இங்கே அழுத்தவும்.
இந்து சமயத்திற்கு ஓர் அறிமுகம் இங்கே அழுத்தவும்.
பத்துப்பாட்டு இங்கே அழுத்தவும்.
சகலகலாவல்லி மாலை இங்கே அழுத்தவும்.
நாயன்மார்கள் / சமயக் குரவர்கள்
இங்கே அழுத்தவும்.
ஏன்வேண்டும்சைவம் ? எதனால்வேண்டாம்அசைவம் ? இங்கேஅழுத்தவும்.
கந்தபுராணம் இங்கேஅழுத்தவும்.
சைவ உணவால் ஏழு அற்புத நன்மைகள்
இங்கேஅழுத்தவும்.
மெய் ஞானத்தை அடையும் வழி (பகுதி-1/ வழி-37) இங்கேஅழுத்தவும்.
ஐயப்பன் ஆவதாரமும் சபரிமலை யாத்திரையும்
மார்கழி நோன்பு – திருவெம்பாவை
சூரசங்காரம் – சூரன் போர் கந்தபுராணம் கதை சுருக்கம்
சைவ தத்துவங்கள் இங்கேஅழுத்தவும்.
திருக்குறளில் சைவ சித்தாந்தம்
இங்கேஅழுத்தவும்.
விவேக அமுதம்
அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே! இங்கேஅழுத்தவும்.
தியானம்
இறை வழிபாடும் ஆலய தரிசனமும்
மார்கழி நோன்பு – திருவெம்பாவை சிவதொண்டன் இங்கேஅழுத்தவும்.
தமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு இங்கேஅழுத்தவும்.
சிவபுராணம் இங்கேஅழுத்தவும்.
சூரியனார் கோயில் இங்கேஅழுத்தவும்.
அனுமன் வழிபாடும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தின் சிறப்பும்
நினைவில் நிற்கும் முக்கிய பண்டிகைகள்
இங்கேஅழுத்தவும்.
Saivam
SAIVA MUNNETTA SANGAM UK Please visit here.
Knowing our roots Please visit here.
Devotion/Bhakthi
Please visit here, here.
NAMAHSHIVAYA Please visit here.
Ganesha Please visit here.
Tiruvacagam Please visit here.
Hindu devotional songs Please visit here.
History of Devotion/Bhakthi Please visit here.
Bhakti please visit here, and here.
Bhakti-Yoga Please visit here, and here.
SPIRITUAL THOUGHTS Please visit here.
Millions flock to batu vaves temple for devotional offerings in thanksgiving PLEASE VISIT HERE.
What is Saivism? Please visit here.
Hindu Spiritual Links
Bhagvad Gita
Hindu Festivals
-
Kumbha Mela Festival
-
More information in Kumbha Mela
Nayanars
This article is about Shaivite poets of Tamil Nadu. For the ethnic ,see Nayanar(Nair subcaste).
Shiva and his devotees
For other uses of the name, see Nayanmar.The Nayanars or Nayanmarswere Shaivite devotional poets of Tamil Nadu, active between the fifth and the tenth centuries CE. The Tamil Śaiva hagiography Periya Puranam, a volume of theTirumurai, written during the thirteenth century CE, narrates the history of each of sixty-three Nayanars and the history of nine Thokai Adiyar.
Cuntarar‘s eighth century work Tirutoṇṭar tokai lists 60 Shaiva saints[1] but gives none of the legends associated with them. In the tenth century Nambiyandar Nambi composed the Tirutoṇṭar Antādi, a sequence of interlocking verses the title of which can be rendered as the Necklace of Verses on the Lord’s Servants. In this work Nambi add Cuntarar, himself and his parents to the sequence, creating what is now the canonical list of sixty-three saints, each with a brief sketch of their legend.
Nayanars were from varied backgrounds, ranging from kings and soldiers to untouchables. The foremost Nayanars are Appar, Cuntarar and Campantar. Together with the twelve VaishnavaAlvars, the Nayanars are sometimes accounted South India’s 75 Apostles of Bhakti because of their importance in the rise of the Hindu Bhakti movement.
A Definition from Indian Spirituality(Aum) Please visit here.
Hinduism & Science please visit here.
Frequently Asked Questions please visit here.
Hindu Art Please visit here.
Hinduism Please visit here.
Lord Shiva – God Of All Please visit here
Masi Magam Please visit here.
Meaning of Thai Pongal please visit here.
NAMAHSHIVAYA please visit here.
Panguni Uthiram Please visit here.
PRADOSHA VRATA Please visit here.
Shiva As Nataraja – The Lord of Dance Please visit here.
Shivaratri Please visit here.
Sri Hanuman Please visit here.
Sun—The Eye Of The World Please visit here.
Tamil New Year please visit here.
Thai Pusam Please visit here.
The Mahabharata Please visit here.
Vairavar Madai Please visit here.
Why should birthday be celebrated as per Hind lunar calender? please visit here.
Sacred Objects: Trees, Lotuses, Cows
Why are certain trees and plants as sacred? Please visit here.
Lessons on saiva siddhanta Please visit here.
MURUKAN WORSHIP IN FIJI
PLEASE VISIT HERE.
Mauritius : When walking on fire does not burn இங்கே அழுத்தவும்.
BRIEF HISTORY OF MURUKAN CULT IN MAURITIUS Please visit here.
Swami Vivekananda
When I Asked God for Strength He Gave Me Difficult Situations to Face When I Asked God for Brain & Brown He Gave Me Puzzles in life to Solve When I Asked God for Happiness He Showed Me Some Unhappy People When I Asked God for Wealth He Showed Me How to Work Hard When I Asked God for Favors He Showed Me opportunities to Work Hard When I Asked God for Peace He Showed Me How to Help Others God Gave Me Nothing I Wanted He Gave Me Everything I Needed
– Swami Vivekananda
Swami Vivekananda
Speech at Chicago
SWAMI VIVEKANANDA’S
MESSA ON SEP 11,1893: Please visit here.
List of Hindu temples Please visit here, and here.
Tulsi PuPlease visit here.
Pray Daily How to Pray
1-நம்முள் இறைவனை உணர்வதே உண்மையான கடவுள் வழிபாடு!!
சிவப் பரம்பொருள் உயிர்களுக்குச் செய்திருக்கும் அருட்செயல்களை நினைதலும் வழிபாடாகும்.அது பற்றியே திருமுறை ஆசிரியர்களும்,அவர்களுக்குப் பின்வந்த பெருமக்களும்,சிவனுடைய அருட்செயல்களை எழுத்துத் தோறும் இன்பம் பெருக்கு,இனிய இசை கலந்த பாட்டுக்களில் தொகுத்துப் பாடியுள்ளனர்.அவற்றைப் பாடிப் பயிலுவதால் நமதுள்ளம் அவனுடைய பேரருட் பெருமையில் தோய்ந்து பேரின்பமும்,உலகியல் நுகர்ச்சிகளை மறந்து தூய்மை எய்துகிறது.
இன்றைய மக்களினம் பொருட்செல்வம் பெறுவதே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு,அதனைப் பெருகப் பெறுவதற்குரிய விஞ்ஞானம்,தொழில்,வாணிகம்,அரசியல் என்ற துறைகளிலே பெருமயக்கம் கொண்டு இயலுகின்றது.உலக வாழ்க்கைக்குப் பின் உயிர்களுக்கு வேறு வாழ்க்கை இல்லை என்று கூறும் சமயவுரைகள் செல்வாக்குப் பெற்றதே இதற்குக் காரணமாகும்.மேலும் அச்சமயங்கள் கடவுள் கொள்கையும் வழிபாட்டு மரபும் உடையவனாயினும் மக்களை அறிவாராச்சி வகையில் அறிந்துணரும் வழிவகைகளை காட்டாமல்,கண்மூடி நம்பிக்கையே வற்புறுத்தின.அதனால் வாழப் பிறந்த மக்களுக்கு மண்ணில் வாழ உரிமையுண்டு என்பதை மறந்து,ஒருவரையொருவர் தாழ்த்தியும்,வேறுபடுத்தியும்,அடிமைப்படுத்தியும் வாழ்கின்றனர்.இன்றோ மக்களினம் விஞ்ஞானத்தால்,பேரழிவு விளைக்கும் கருவிகளைச் செய்து பெருங்கேட்டை எதிரே நிறுத்திக் கொண்டு வருந்துகின்றது.இவ்வுலக வாழ்வுக்குப் பின்னும் வாழ்வு உண்டு,இன்று செய்வன நல்லவனாயின் மறுமையில் இன்பமுண்டு,தீயனவாயின் துன்பம் எய்தும் என்ற எண்ணம் நெஞ்சில் ஊன்றி விடுமாயின் தீமை குறையும்,நன்மை பெருகும்.
தீமை செய்வதற்கு அச்சமும்,நன்மை செய்வதகு விருப்பமும் மக்கள் உள்ளத்தில் வளமுற அமைவதற்குச் சமயவுணர்வை மக்களிடையே பரப்புவதைத் தவிர வேறு வழியில்லை.நம் நாட்டில் கோயில் வழிபாடு பொறுபற்ற நிலையிலும்,விழாக்கள் பொழுதுபோக்காகவும் மாறி வருகின்றன.இறைவனுக்கு நீராட்டுவித்தலும்,தேங்காய் உடைத்தலும்,சூடம் ஏற்றுவிப்பதும்,விளக்கிடுவதும்,விழாச் செய்வதுமே சமயப் பணியாகக் கருதி அமைகின்றனர்.ஆயினும் இவற்றைச் செய்பவர் மனம் இவற்றோடு நேரே தொடர்புபடுவதில்லை.
ஆண்டவனை வழிபடும்போது திருவருளை சிந்திக்கும் பயிற்சி இல்லாமைதான் வழிபாட்டில் மனம் பொருந்தாமைக்கு காரணமாகும்.
அச்சிந்தனை திருவைந்தெழுத்தை முன்னிறுத்தி நமது மனத்தின் கோழைப் பண்பை மாற்றித் திண்மையும்,தூய்மையும் உடையதாக்கும்.மனம் திண்ணியராயினோர்,திருக்குறள் சொல்வதுபோல்,”எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்”.
மனம் தீய எண்ணங்களுக்கு இடமாகும் போது தேவாரம்,திருவாசகம் படித்து கருத்தறிய முற்படுவோமானால் மக்கள் மாநிதி செல்வம் நிறைவிக்கும்
7-வாழ்தலே வழிபாடு
அருள்மேவ அவணியர்க்கு,
வீறு அது ஏறும் தமிழால்
வழிகண்டவன்”
என்று திருஞானசம்பந்தரைத்
திருத்தொண்டர்
திருவந்தாதி அருளிய
நம்பியாண்டார் நம்பி புகழ்வார்.
அதாவது தலையில்
கங்கையை அணிந்துள்ள
சிவபெருமானின் அருளைப்
பெறுவதற்கு உலகத்தவர்க்கு
உயர்வு தரும் தமிழால்
வழிகண்டவர் திருஞானசம்பந்தர்
என்று குறிப்பிடுகின்றார்.
பதிகப் பெருவழியாகிய
இறையன்பு நெறியை நமக்கு
அளித்தவர் திருஞானசம்பந்தர்.
தெரிந்த, எளிய, அன்னைத்
தமிழிலேயே இறைவனைப்
பாடி அடையலாம்
என்பதே இதன் கருத்து.
இதனையே தமிழர்
வழிபடு மரபாகச் சேக்கிழார்
தமிழர் வாழ்வியல் பெட்டகமான
பெரிய புராணத்தில்
குறிப்பிடுகின்றார்.
அடியார்கள்
பெருமையை எவ்வாறு,
என்னசொல்லிப்
பாடுவது என்று சேக்கிழார்
இறைவனை உள்கி நின்றபோது,
“உலகெலாம்” என்று இறைவன்
அன்னைத் தமிழில்
அடியெடுத்துக் கொடுத்தார்.
பெருமானின் சிவஞானப்பால்
உண்ட திருஞானசம்பந்தர்
திருநெறிய தமிழில்தான்
இறைவனைப் பாடினார்.
சிவஞானபால் தமிழ்ஞானம்
ஊட்டியதை என்னுகையில்
சிந்தை குளிர்கின்றது.
சூலை நோயால்
துடிதுடித்துத் தமக்கைத்
திலகவதியாரிடம்
திரு நீறு பெற்று,
அதிகை வீரட்டானத்து
இறைவனைச்
“சலம்பூவோடு தூபம்
மறந்தறியேன்,
தமிழோடு இசைப்பாடல்
மறந்தறியேன்”
என்று அழகு தமிழில்
பாடியே சூலை நோய்
நீக்கினார்
திருநாவுக்கு அரசர்”
என்று இறைவனால்
அழைக்கப்பெற்ற அப்பர்
பெருமான்.
பெரிய புராணத்தின் முதல்
சருக்கமான திருமலைச்
சருக்கத்தில் சுந்தரர்
பெருமானின் வரலாறு
இடம்பெற்றிருக்கின்றது.
இவ்வரலாற்றில் இறைவன்
தமிழை விரும்பிக் கேட்டதாக
சேக்கிழார்
குறிப்பிடுகின்றார். தூய
மறையினைப் பாடும்
இறைவன், “நமக்கும் அன்பின்
பெருகிய சிறப்பின் மிக்க
அர்ச்சனை பாட்டேயாகும்,
ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுக”
என்று கூறியதாய்ச்
சேக்கிழார்பெரிய
புராணத்தில் பதித்துள்ளார்.
இதன் வழி இறைவனுக்குச்
சிறந்த
அர்ச்சனை பாடுதலே ஆகும்
என்று தெளிவாகிறது.
பெருமான் விரும்பிக் கேட்ட
உயர் தமிழைத் தாய்
மொழியாகக் கொண்டுள்ள
தமிழர்கள் பெருமானைத்
தமிழிலேயே போற்றிப்
புகழ்ந்து, அகங்குழைந்து,
கண்ணீர் மல்கி வழிபடலாம்
என்று புலனாகிறது.
பெருமானால் ஆட்கொள்ளப்
பெற்ற சுந்தரரும், “பித்தா” என்ற
தமிழ்ச்சொல்லைக்
கொண்டே பெருமானை
முதலில்
வழுத்தி வழிபடுகின்றார்.
இறைவனைத் தமிழில்
வழிபடுவதே தமிழர்
வழக்கு என்பதனைச் சேக்கிழார்
இருளில் துணிந்து பின் அருளில் பணிதலே சரணாகதி
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோம் அல்லோம்”
நற்சங்க வெண்குழை ஓர் காதில்
போமாற்கே நாம் என்றும்
மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே”
கதழ்பரிய கலி மாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகல் மறவரும் என
நான்குடனே மாண்டராயினும்
மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் நீதி
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”
ஆவின் உகுநீர் நெஞ்சுசுட”
என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி” எனச் சுட்டது.
பெருவாழ்வு .
ஒரு வாழ்வு ,ஒரு வழி ,அவ்வழியில் பெருவாழ்வு .
ஒரு வாழ்வு , அதுதான் உயிர் .
ஒரு வழி , அதுதான் சிவம் (இன்பம்).
பெருவாழ்வு , அதுதான் இந்த உலகத்தில் உயிரின் நிரப்புதல் .
சிவத்தைத் (இன்பத்தை) தவிர வேறு வழியில்லை
வாழ்க்கையைப் பெருப்பிப்பதனால் ,
பெரு வாழ்வோ இன்பமோ வராது.
இன்பத்தின் வழி நின்றால் பெருவாழ்வு அமையும் .
இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க .
மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் .
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
சிவ சின்னம் – உருத்திராட்சம்
ஓம் நமசிவாய
சிவ சின்னம் – உருத்திராட்சம்
உருத்திராட்சம் என்பது உருத்திர + அட்சம் . ஸ்ரீகண்ட உருத்திரரின் கண் என்று பொருள் . சிவபெருமானின் கண்ணிலிருந்து தோன்றிய கண்ணீரே உருத்திராட்ச மரம் என்பது வரலாறு
ஒவ்வொரு மரத்திற்கும் அதிதெய்வம் என்று ஒன்று உண்டு.இந்த உருத்திராட்ச மரத்திற்கு சிவபெருமானே அதிதெய்வமாக உள்ளார்
உருத்திராட்சம்,உருத்திராக்கம், கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி,கண்டம், நாயகமணி, கண்மணி, கண்டி, கண்டிகை, முண்மணி அக்கமணி என பல பெயர்களால் அழைக்க பெறுகிறது.சம்பந்தர் சுவாமிகள் தமது நமசிவாயப் பதிகத்தில் அக்குமாலை கொடு அங்கையில் எண்ணுவார் என்றே பாடியுள்ளார்.
பெண்களுக்கு மாங்கல்யம் போல சிவனடியார்,
சிவத்தொண்டர்களுக்கு உருத்திராட்சம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் .மூர்த்தி நாயனார் உருத்திராட்சம்,ஜடாமுடி,திருநீறு என்று இவற்றினால் வாழ்ந்தார் . சுந்தரமூர்த்தி சுவாமிகள் மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் என்று தமது திருத்தொண்டத் தொகையில் பாடியுள்ளார் .
இந்த உருத்திராட்சம் ஒரு முகம் முதல் 38 முகம் உள்ளதாக கூறுகிறார்கள் .நாம் பொதுவில் ஐந்து முகம் உள்ள உருத்திராட்சத்தை பயன்படுத்தலாம் . இயற்கையாகவே துளையுள்ள ஒன்று தான் உருத்திராட்சம்.
யாரெல்லாம் ஒரு(ஏக ) உருத்திராட்சம் அணியலாம்?
1.தீட்சை பெற்றவர் பெறாதவர் என அனைவரும் அணியலாம்
2.ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் எல்லா வயதினரும் எல்லாக்காலத்தும் அணியலாம்
3.மது மாமிசம் அறவே சாப்பிடக்கூடாது .அதன் புனிதம் காக்கப்படவேண்டும்
4.தாம்பத்தியம் செய்ய இல்லற வாழ்க்கைக்கு தடை எதுவும் இல்லை
5.பெண்கள் மாதவிலக்கு பிறப்பு இறப்பு தீட்டு
என்று எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது ஏனெனில் இவையெல்லாம் மனிதபிறவியில் உண்டான இயற்கை நிகழ்வுகளே ஆகும்
6.வியாதி உள்ளவர்கள், குழந்தைகள் , மன நோய்க்கு ஆட்பட்டவர்கள், நரம்பு,வலிப்பு, இரத்தஅழுத்தம் மற்றும் அது சம்பந்தமான நோய்கள் என சகல நோய் பீடித்தவர்களுக்கும் மிக சிறந்த வைத்தியமாகும்
7.பில்லி ஏவல் சூனியம் பேய் பிசாசு தந்திரம் மந்திரம் எந்திரம் கண் திருஷ்டி போன்ற எதுவும் உருத்திராட்சம் அணிந்தவர்களுக்கு வேலை செய்யாது .
8.சிவப்பு கயிற்றில் கோர்த்து கழுத்தில் கண்டத்தில் படுமாறு அணிய வேண்டும்
9.குளிக்கும்போது உருத்திராட்சம் அணிந்து குளித்தால் கங்கையில் குளித்த பலன் உண்டு
10.ஒரு முறை அணிந்தால் வாழ்நாள் முழுக்க
அணிந்திருக்க வேண்டும் .மரணத்தின் போது எமகணங்கள் நம்மை நெருங்காது . சிவகணங்கள் வந்து கொண்டு செல்வார்கள் அதனால் நரகம் கண்டிப்பாக இல்லை .
11.ஆலய வழிபாட்டின் போதும் சிவபூசையின் போதும் கண்டிப்பாக உருத்திராட்சம் அணிய வேண்டும் அதில் உள்ள மின் காந்த ஆற்றல் நமக்கு இறைவனை நெருங்கி இழுத்து வரும் காந்தம் இரும்பை ஈர்ப்பது போல
உருத்திராட்சத்தின் பயன்கள்
1.அணிந்து கொள்ள 2.செபிக்க 3.பூசிக்க
உருத்திராட்சம் அணியும் இடங்களும் எண்ணிக்கையும்
1.குடுமி————-1மணி
2. தலை————22மணிகள் – இண்டை என்று பெயர்
3.காதுகள்———-1(அ )6 மணிகள் -ஆறுகட்டி என்று பெயர்
4.கழுத்து———–32 மணிகள் – ஆரம் என்று பெயர்
5.மார்பு ————108(அ) 54 மணிகள் – மாலை என்று பெயர்
6.புயங்கள்(தோள் )——–16 மணிகள் – வடம் என்று பெயர்
7.கைகள்———-12 மணிகள் – கடகம் என்று பெயர்
ஒரு உருத்திராட்சம் அணிந்து கொள்ள எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது .உருத்திராட்சம் ஒன்றுக்கு மேற்பட்டு அணியும் போது சயனத்தின் போதும் (உறக்கம் ) மலசலம் கழிக்கும் போதும்,பிறப்பு இறப்பு மற்றும் தீட்டு காலங்களிலும் புணர்ச்சி எனும் ஆண் பெண் சேர்க்கையின் போதும் அணியக்கூடாது அப்போது கழட்டி வைத்து விட வேண்டும்
மந்திரங்களை உச்சரிப்பது தான் ஜெபம் அது மட்டுமே ஜெபம் எனப்படும்.எதை ஜெபிக்கவேண்டும் .ஐந்தெழுத்தை ஜெபிக்க வேண்டும் .(THE METHOD OF CHANTING IS CALLED JEBAM ) இந்த செபம் முறைகள் நான்கு வகைப்படும்
1.உரை 2. மந்தம் 3. மானதம் 4.சுத்த மானதம்
1.உரை என்பது பிறர் காதுக்கு கேட்பது போல உரக்க செபிப்பது
2.மந்தம் என்பது நம் காதுகளுக்கு மட்டும் கேட்பது போல் செபிப்பது
3.மானதம் என்பது சத்தம் வெளியே வராமல் உதடு அசையாமல் செபிப்பது
4.சுத்த மானதம் என்பது மனம் சம்பந்தம் இல்லாமலே செபிப்பது .அது சாமான்யர்களுக்கு அரிது
ஜெப மாலை என்று தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும் அது 108 மணிகள் அல்லது 54 மணிகள் கொண்டிருக்க வேண்டும் அதில் நாயக மணி (மேரு மணி ) ஒன்று சேர்த்துக் கொள்ளவேண்டும் .108 முறை ஐந்தெழுத்தை குரு நாதர் உபதேசித்த வண்ணம் ஜெபிக்க வேண்டும் . 54 மணிகள் கொண்டிருந்தால் மேரு மணியை தாண்டாமல் திருப்பி எண்ணி செபிக்கவேண்டும்.இப்படி செபிக்கும்போது வலது கையில் கொண்டு இதயத்தின் அருகே வைத்து ஆள்காட்டிவிரல் மீது வைத்து பெருவிரலால் நகர்த்தி செபிக்கவேண்டும் . அப்போது பிறர் பாராத வண்ணம் ஒரு வஸ்திரம் கொண்டு மூடிக்கொள்ளவேண்டும்
ஏனென்றால் பிறர் பார்வை பட்டால் மந்திரம் பலிக்காது
ஜெபிக்கும்போது நாம் இன்னும் ஒரு பிறவி எடுத்து இன்னும் அதிக காலம் சிவ சிந்தனையோடும் சிவபூசை செய்தும் பின் இறைவனடி சேர விரும்பினால் செபிக்கும் போது மணியை நம்மை நோக்கி விரலால் நகர்த்தவேண்டும் . அதற்கு போக காமிகள் என்று பெயர்
இப்பிறவியிலேயே நமக்கு முக்தி பெற வேண்டும் பிறவி தளையில் இருந்து மீள வேண்டும் என்றால் மணியை மேல் நோக்கி தள்ளி செபிக்கவேண்டும் அதற்கு பெயர்
முக்தி காமிகள் எனப்படும்
மேற்சொன்ன போககாமி முக்திகாமி என்று நீங்கள் ஜெபம் செய்யும் முறையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது .குரு நாதர், மனைவி
என்று யாரிடமும் அதை பகிர கூடாது உங்கள் மனதுள்ளேயே வைத்துக்கொள்ளவேண்டும்
2 முக 3முக 12முக 13 முக உருத்திராட்ச மணிகள் ஜெப மாலைக்கு ஆகாது
ஏன் 108 முறை ஜெபிக்க வேண்டும் ? நாம் ஒரு நாளில் சராசரியாக 21600 தடவை சுவாசிப்பதாக சொல்லப்படுகிறது .அதில் பாதி நேரம் உறக்கம் ஒய்வு போக மீதம் 10800 முறை நாம் விழித்து இருந்து சுவாசிக்கிறோம் .அதில் 100 இல் ஒரு பங்கு 108 .எனவே 100 மூச்சுக் காற்றுக்கு ஒரு முறை இறைவனை நினைக்க அதை வழங்கிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாகவே 108 ஜெபம் செய்யவேண்டும் என்று பெரியவர்கள் வகுத்து வைத்துள்ளார்கள் . இறைவனின் மிகப்பெரிய கருணையை இது காட்டுகிறது
ஏன் ஐந்தெழுத்தை ஜெபிக்கவேண்டும் .ஓதுதல் என்று சொன்னால் என்ன என்ற கேள்வி வரும். காரணம் திருமுறைகள் – ஓத வேண்டும்
சாத்திரங்கள் – கற்க வேண்டும் .
திரு உருவங்களை (கடவுளை) – தியானிக்க வேண்டும். மந்திரங்களை – ஜெபிக்க வேண்டும். ஐந்தெழுத்து மந்திரம் தலையாய
மந்திரம் அதனால் அதை ஜெபிக்க வேண்டும்
அதனால் நம் வினைகள் (பாவங்கள்)அழியும்
சிவபூசைக்கு சிவலிங்கம் இல்லாத இடத்தில் உருத்திராட்சத்தையே சிவலிங்கமாக பூசிக்கலாம் இதற்கு சணிகலிங்கம் என்று பெயர்.சணிகலிங்கம் என்றால் பூசித்ததும் விட்டு விடுதல் என்று பொருள் .இது போல
சணிகலிங்கமாக அன்னம், மண்,ஆற்று மணல்,
அரிசி,கோமியம், முதலானவற்றையும் பூசிக்க உகந்தவை என்று அருளியுள்ளார்கள்
உருத்திராட்சம் அளவு நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது,இலந்தைக் கனி அளவுள்ளது மத்திமம் கடலை அளவுடையது அதமம் என்று அதன் வடிவ அளவு கொண்டும் ஒரு வரையறை உள்ளது
உருத்திராட்சம் உண்மையானதா இல்லையா என பரிசோதிக்க நீரில் இட்டால் மூழ்கினால்
அது நல்ல உருத்திராட்சம் .மற்ற தாவர விதைகள் நீரில் மிதக்கும் தன்மையுடையன .
உருத்திராட்சம் அணியும் பலன்கள்
திருமகள் பேரருள் ,செய்தொழில் மேன்மை , கல்வி, உள்ளத்தூய்மை, மன அமைதி , திருமண பேறு , புத்திர பேறு ,கிரக பாதிப்புகள் நீக்கம் என பல நன்மைகள் கிடைக்கும்
மாரடைப்பு, இரத்த அழுத்தம் ,நீரிழிவு , புற்று நோய் போன்ற நோய்களின் தீவிரம் குறைவதாக மேல்நாட்டு ஆராய்ச்சிகள் சொல்கின்றன
இந்த சிவசின்னங்கள் திருநீறு உருத்திராட்சம்
ஐந்தெழுத்து ஜெபித்தல் நமக்கு கிடைக்க நாம் அவன் அருள் பெற்றிருக்க வேண்டும்.இதைக் கடைப்பிடிப்பவர்களை சிவபெருமான் தன் உள்ளங்கைகளில் வைத்து தாங்குவார் என்பதில் துளி கூட ஐயமில்லை .நம் சமய சின்னம் அணிவதை நாம் பெருமையாக கருத வேண்டும் .ஏனெனில் மிக உயர்ந்த மிகவும் பழமையான கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட உன்னதமான கொள்கைகளை கொண்ட சமயம் சார்ந்தவர் என்று பெருமையாக பறைசாற்றிக் கொள்ளலாம் அதற்கு துளி கூட வெட்கமோ கூச்சமோ தேவையில்லை .சிவசின்னம் அணிதலை மிகப்பெரிய கடமையாக கருதி செய்யவேண்டும்
தமிழ்நாட்டுக்குள் உண்மையான ஈடுபாட்டுடன் உருத்திராட்சம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது உங்கள் முகவரியை கீழ்க்கண்ட எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்கள் 9965533644. உருத்திராட்சம் பெற்று அணிந்து சிவானுபவத்தில் பெறற்கரிய பேரின்பம் பெற எல்லாம் வல்ல எம்பெருமான் திருவருள் துணை நிற்கும் .
போற்றி ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
திருமுறைகள் பெருமை
ஓம் நமசிவாய
திருமுறைகள் பெருமை
திருமுறை என்பதன் பொருள் திரு என்றால் செல்வம், முறை என்றால்
நூல்.மாறாத செல்வத்தை மக்கள் எளிதாகப் பெறுவதற்கு வழிகாட்டும் நூல் என்பதைக் குறிக்கும்
நம்முடைய பிறப்பில் இருந்து இறைவன் திருவடியை அடையும்
வரை நமக்கு ஏற்படும் இன்னல்களை நீக்க அவனருளாலே அவன் தாள்
வணங்கி நின்று திருமுறைகளைப் பாடி பயன் அடையவேண்டும்
நாம் நம்முடைய தேவைகளை திருமுறை
களின் மூலம் பெற்று திருவருளின்
துணையோடு அனுபவிப்பதே சிவானுபவம் ஆகும். இவ்வுலகிற்கு
தேவையான பொருள் மற்றும் அருள் உலகத்திற்கு தேவையான
அருள் என அனைத்தையும் ஒருங்கே கொடுப்பது திருமுறைகளே
கருவாகி,உருவாகி உழலும் நாம் அதில்
இருந்து மீள தில்லையுள் கூத்தனை தென் பாண்டிநாட்டானை
அல்லல் பிறவி அறுப்பானை சொல்லுவதற்கு அரியானின்
திருவடியை வாழ்த்தி வணங்கி போற்றி அவன் தாள் பற்றி செல்ல மிக
சிறந்த வழிகாட்டியாக அவரே அளித்த பொக்கிசமே திருமுறைகள்
சம்பந்தசுவாமிகள் அருளிய தேவாரத்தில்
வினைநீக்கம் பற்றியே அதிகமாக பாடியுள்ளார்
உயிரைப்பற்றிய ஆணவ மலத்தினை நீக்கும்
பொருட்டு பிறப்பு இறப்பு என்ற செயல்களை இறைவன்
ஏற்படுத்துகிறார் .இந்த உயிர் நால்வகைத் தோற்றம் ஏழ் வகை
பிறப்பு எண்பத்திநாலு லட்சம் யோனி பேதம் என பிறந்து
உழல்கிறது இதை கடலை கையால் நீந்திகரையேறுவதை போல என்று
அருள்நந்தி சிவாசாரியார் கூறுகிறார்
கருத்தரிக்க,கரு காக்க ,சுகப்பிரசவம் ஆக
,
வாதம் முதலான நோய் இல்லாமல் நடக்க,
கல்வி ஞானம் சிறக்க , படித்து வேலை கிடைக்க ,வேலை ,தொழில்
இலாபம் பெற , இல்வாழ்க்கை அமைய ,அமைந்த வாழ்வு
சிறக்க ,நாட்களாலும் கோள்களாலும் வரும்
இன்னல்களை போக்க ,நோய்நொடி இல்லா
வாழ்வு பெற ,இறைவன் திருவருள் கிடைக்க
அமைதி பெற முக்தி பெற என அனைத்து
வாழ்வியல் மற்றும் வாழ்விற்குப் பிறகும் பெரும் பேறு
கிடைக்க திருமுறைகள் வழிகாட்டுகின்றன
சில திருமுறைப் பெருமைகள்
1.வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்தது பிறகு திருத்தாளிட்டது
2.பாலை நிலம் நெய்தல் ஆனது
3.பாண்டியன் சுரம் தீர்த்து கூன் நிமிர்த்தியது
4.தேவார ஏடுகளை தீயில் கருகாமல் பச்சை யாக எடுத்தது எதிர் நீச்சல் இடவைத்தது
5.ஆண் பனை பெண் பனையாகியது
6.விஷத்தினால் இறந்த செட்டி உயிர்பெற்றது
7.எலும்பை பெண்ணாக்கியது
8.சுண்ணாம்புக் காளவாயில் 7 நாட்கள் இருந்தும் உயிர் பிழைத்தது
9.மத யானையை வலம் வரச்செய்து வணங்கவைத்தது
10.மானசரோவரில் மூழ்கி திருவையாற்றில் எழுந்தது
11.கல்லை தெப்பமாக கொண்டு கரையேறியது
12.செங்கல்லைப் பொன்னாக்கியது
13.விருதாசலத்தில் மணிமுத்தாற்றில் இட்ட பொன்னை ஆரூர் குளத்தில் எடுத்தது
14.முதலை விழுங்கிய பிள்ளையை மீட்டது
15.காவேரி பிரிந்து வழி விட்டது
16.நரியை குதிரையாக்கியது
17.வெள்ளானையில் கயிலாயம் சென்றது
18.குதிரையை நரியாக்கியது
19.பிறவி ஊமையை பேச வைத்தது
20.பரம்பொருளான சிவபெருமானே எழுதிய பெருமைக்குரியது
இப்படி திருமுறைகளின் அற்புதங்கள் ஏராளம் அதன் பெருமைகளை
அளவிட முடியாது திருமுறைகளை நாளும் ஓதுவோம்
சிவானுபவம் பெறுவோம்
போற்றி ஓம் நமசிவாய
நாம் செய்யும் நமஸ்காரங்கள் ஐந்து வகைப்படும் அவை,
ஓரங்க நமஸ்காரம், மூன்று அங்க நமஸ்காரம், (பஞ்ச அங்க) பஞ்சாங்க நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் மற்றும் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகும்
ஓரங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலையை மட்டும் குனிந்து வழிபாடு செய்தல் ஓரங்க நமஸ்காரம் எனப்படுகிறது.
மூன்று அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தலைமேல் தனது இரு கைகளையும் கூப்பி வழிபடுவது மூன்றங்க நமஸ்காரம்
பஞ்ச அங்க நமஸ்காரம்: வழிபடுபவர், தனது தலை, கைகள் மற்றும் முழந்தாள்கள் ஆகிய ஐந்து அங்கங்கள் மட்டும் தரையில் படுமாறு வழிபாடு செய்வது பஞ்ச அங்க (பஞ்சாங்க) நமஸ்காரம் எனப்படுகிறது. பஞ்சாங்க நமஸ்காரம், பொதுவாக பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய நமஸ்காரம் ஆகும்.
அஷ்டாங்க நமஸ்காரம்: ஒருவர், தமது தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புகள் தரையில் படும்படி வணங்குதல் அஷ்டாங்க நமஸ்காரம் ஆகிறது.
சாஷ்டாங்க நமஸ்காரம்: வழிபடுபவர் தமது தலை, கைகள், மார்பு மற்றும் முழந்தாள்கள் முதலான அத்தனை அங்கங்களும் பூமியில் படும்படி வழிபாடு செய்வது சாஷ்டாங்க நமஸ்காரம் எனப்படும்.
நமஸ்கார தத்துவம்:என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை;எல்லாம் உன் செயல்;என்று இறைவனை சரணாகதி அடைவதே நமஸ்காரத்தின் நோக்கமாகும்
கோயிலின் உள்ளே நமஸ்காரம் செய்வதெப்படி?
கோயில் வளாகத்தில் எல்லா இடங்களிலும் நமஸ்கரிப்பது உசிதமல்ல. கோயில் கர்ப்பக்கிருகம் வடக்கு நோக்கியோ அல்லது மேற்கு நோக்கியோ இருந்தால். கொடிமரத்தின் இடது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம் கர்ப்பக்கிருகம் தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ இருந்தால், கொடிமரத்தின் வலது பக்கமாக நமஸ்காரம் செய்யலாம்
அபிஷேகம் அல்லது நிவேதனம் செய்யும் நேரங்களில் நமஸ்காரம் செய்வதைத் தவிர்க்கவும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்வது நியதி, நமஸ்காரம் செய்வதானால் 3,5, 7,9,12 முறைகள் நமஸ்காரம் செய்ய வேண்டும், 1 அல்லது 2 முறை நமஸ்கரித்தல் கூடாது. நமஸ்காரம் செய்பவர் தலை, கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி நமஸ்காரம் செய்யவேண்டும்.
சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் சமயம் சைவசமயமே
சிலப்பதிகாரத்தை எழுதிய வித்தகப் புலமையாளர் இளங்கோவடிகள் என்றும் சிலர் அவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என எழுதியும் பேசியும் வருகின்றனர். அவர் சமண சமயத்தவர் எனக் கூறுவதற்கு நூலில் எந்த ஆதாரமும இல்லை. பிறகு ஏன் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் என்றால், அடியார்க்கு நல்லார் என்னும் உரையாசிரியர் சொல்லிச் சென்ற கருத்தை ஏற்று அவ்வாறு சொல்லிவருகின்றனர்.
அடியார்க்கு நல்லார் என்ன சொல்லியிருக்கிறார்?
“குணவாயிற் கோட்டத்து அரசுதுறந் திருந்த குடக்கோச் சேரன் இளங்கோவடிகட்கு” என்று தொடங்குகின்ற பதிகத்தின் இவ்விரண்டு அடிகட்குப் பொருள் சொல்ல வந்த அடியார்க்கு நல்லார்,
“திருக்குணவாயில் என்னும் ஊரில் இருந்த அருகன் கோயிலில் இராசபோகத்தைத் துறந்து இருந்த இளங்கோவடிகட்கு” எனப் பொருள் எழுதுகிறார். குணவாயில் கோட்டம் திருக்குணவாயிலில் இருந்த அருகன் கோயில்.
அருகன் – சமண மதத்தவர் வணங்கும் தேவன்.
கோட்டம் – கோயில்
அடிகள் – துறவிகட்கான அடையாளப் பெயர்.
அரச போகத்தைத் துறந்து, துறவியாகி அருகன் கோயிலில் வந்து தங்கியிருந்தார் இளங்கோ என்கிறார் அடியார்க்கு நல்லார். இந்த உரைகொண்டு இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சேர்ந்தவர் எனக் கொள்கின்றனர். ஆனால் இவ்வாறு உரையெழுதிய அடியார்க்கு நல்லார், இளங்கோ சமண சமயத்தவர் எனத் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனினும் அவர் சமணம் சார்ந்தவர் என்ற எண்ணத்திலேயே அடியார்க்கு நல்லார் அவ்வாறு எழுதியுள்ளார் எனக் கொள்வதில் தவறில்லை.
கோட்டம் என்ற சொல்லுக்கு கோயில் என்பது பொருள். இது பொதுப்பெயர் எந்தத் தெய்வம் குடிகொண்டிருந்தாலும் அந்த இடத்தைக் கோட்டம் எனச் சொல்வது அக்கால வழக்கு.
இது போன்றதுதான் அடிகள் என்னும் சொல்லும். அதுவும் பொதுப்பெயரே. எந்த சமயத்துத் துறவியாயினும் அவரை அடிகள் என்று சொல்லுவது சமய மரபு.
மணிமேகலையில் வரும் புத்த மதத் துறவி ஒருவரை அறவணடிகள் என அந்த நூல் சொல்லும். நமது சைவத்தில் நால்வரில் ஒருவராகிய “மாணிக்கவாசகரை “அடிகள்” எனச் சொல்வது வழக்கம். சிவபெருமானையே சைவம் அடிகள் என அழைக்கும். ஆதலால் அடிகள் என்னும் பொதுப்யெரைச் சமணசமயத்துத் துறவிக்கு மட்டும் சிறப்பாக உரியது போல எழுதிய அடியார்க்கு நல்லார் உரை பொருத்தம் அன்று.
கனாத்திறம் உரைத்த கதையுள் “அமரர்தருக் கோட்டம்” (கற்பகமரம் இருக்கும் கோயில்) “வெள்ளானைக் கோட்டம்” (ஐராவதம் இருக்கும் கோயில்)” “புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்” (பலதேவன் கோயில்) ”உச்சிக்கிழான் கோட்டம்” (சூரியனார் கோயில்) “வேல் கோட்டம” (முருகன் கோயில்) எனப் பல்வேறு தெய்வங்கள் எழுந்தருளிய கோயில்களைக் கோட்டம் என்ற சொல்லாலேயே சுட்டிக் செல்கின்றார் இளங்கோவடிகள்.
இதிலிருந்து கோட்டம் என்பது அருகதேவன் எழுந்தருளியுள்ள கோயிலை மட்டும் குறிக்கும் சொல் அன்று என்பது தெளிவாகிறது. ஆதலால் கோட்டம் என்னும் சொல்லையும், அடிகள் என்னும் சொல்லையும் இளங்கோவிற்குரியது போலப் பொருள் கண்ட அடியார்க்கு நல்லார் உரை ஏற்கத்தக்கதாக இல்லை எனத் துணிந்து கூறலாம்.
சரி! அப்படியாயின் இளங்கோவின் சமயம் எதுவாக இருக்கும். என்ற கேள்விக்கு விடைகாண வேண்டும். அது பற்றிப் பார்ப்போம்.
சிவனடியார்க்கு சிவனருளால் பிறந்த செங்குட்டுவன் – இளங்கோ.
“செஞ்சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சித் தோன்றிய வானவன்” எனக் கால் கோட்காதையிலும்
“ஆனேறு ஊர்ந்தோன் அருளில் தோன்றி
மாநிலம் விளக்கிய மன்னவன்”
என வரந்தரு காதையிலும், சிவபெருமான் அருளால் செங்குட்டுவன் பிறந்தான் எனத் தெளிவாகச் சொல்கிறார் இளங்கோ.
(செஞ்சடைவானன் – சிவன்: ஆனேறு ஊர்ந்தோன் – சிவன்)
சிவனருளால் பிறந்த செங்குட்டுவன் சிறந்த சிவபக்தன் என்பதையும், சிவனை அன்றி வேறு தெய்வத்தை வணங்காதவன் என்பதையும் கால் கோட் கதையில் தெளிவாகக் கூறுகிறார்.
“உலகுபொதி உகுவத்து உயர்ந்தோன் சேவடி
இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி” என்னும்
அடிகளின் அர்த்தம் பார்ப்போமா!
“ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட இவ்வுலகத்தைத் தன்னுள் கொண்டவனாகிய சிவபெருமானின் சிவந்த அடிகளை வேறு தெய்வங்களை வணங்காத தலையால் வணங்கி” என்பது அர்த்தம்.
வடதிசையின் மேல் போர் எடுத்துப் புறப்பட்ட செங்குட்டுவனிடம் திருமாலின் பிரசாதம் தரப்படுகிறது. திருமால் கோயில் பட்டர்கள் கொண்டுவந்து தந்த சேடத்தை அவன் தலைமீது வைத்துக் கொள்ளவில்லையாம். ஏன்? சிவபெருமானின் திருவடி அவனது தலையில் இருப்பதால் அவ்வாறு செய்யவில்லை. பிறகு என்ன செய்தான்? திருமால் கோயில் சேடத்தை வாங்கித் தன் தோள் மீது வைத்துக் கொண்டானாம். இதுதான் உண்மை.
மேற்காணும் செய்திகளிலிருந்து செங்குட்டுவனின் சிவபக்தியை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது அல்லவா!
மேலும் ஓர் இடம்.
கனகவிசயரைத் தோற்கடித்து வெற்றிகொண்ட அரசன் செங்குட்டுவன், தன் அமைச்சன் வில்லவன் கோதையை அழைத்து, இமயமலையில் வேள்வி செய்து சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருக்கும் அந்தணர்கட்கு எந்தத் துன்பமும் வாராதவாறு நீ சென்று காக்கவேண்டும் எனக் கட்டளை இடுகிறான் என்றால் சமய உணர்வில் அவன் எப்பேர்ப்பட்டவனாக இருந்தான் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். செங்குட்டுவன் தம்பி இளங்கோ என்பது வரலாறு. இவர்கள் பெற்றோரின் வேண்டுதலால் சிவனருளால் செங்குட்டுவன் பிறந்தான் என இளங்கோ கூறுகிறார். சிவனருளால் செங்குட்டுவன் தோன்றியது போலவே நமது இளங்கோவும் சிவனருளால் தோன்றியவரே எனக் கொள்வதில் தவறுகாண முடியாது. எனெனில் இவர்கள் பெற்றோர் சிவசமயத்தைச் சேர்ந்து சிவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டவர்கள் என்பதால் அவ்வாறுதான் நிகழ்ச்சி நடந்திருக்க முடியும்.
சிவனடியார்கட்குப் பிறந்த பிள்ளையாகிய இளங்கோ சிவபக்தனாகிய செங்குட்டுவனுக்குத் தம்பி. இப்பேர்ப்பட்ட குடும்பத்துப் பிள்ளை வேறு சமயத்திற்குச் செல்லவேமாட்டார். இளங்கோ துறவியானதும் உண்மை. அவர் சைவ சமயத் துறவியாக, சைவ சமய அடிகளாக இருந்திருக்கிறார் என்பதும் உண்மை.
thanks. Mikka nanri.