Colombo (News 1st) மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நதாஷா எதிரிசூரிய எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று(28) மாலை ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் பொலிஸ் மா அதிபருக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டிருந்தார்.
You must be logged in to post a comment.