13
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவெற்றியூர் ரெத்தினவேலு மகன் இளையராஜா (33), ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த அகமது ஷெரீப் மகன் அல்லா பாகேஷ் (25). இவர்கள் இருவரும் முகநூலில் இரு மதங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டுவதை போலும், இரு மதங்களை கொச்சைப்படுத்தும் விதமாகவும், மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் விதமாக, பெண்களை தவறாக பேசியும், தேசியக்கொடியை அவமதிக்கும் வகையிலும், அரசியல் மற்றும் மதத்தலைவர்களை இழிவுபடுத்தும் விதமாக அவதூறு பகிர்களை பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பாக இளையராஜா, அல்லா பாகேஷ் மீது 8 பிரிவுகளின் கீழ் தொண்டி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
You must be logged in to post a comment.