செய்திகள்,முதன்மை செய்திகள் கோபப்பட்ட இளைஞரின் கொலை வெறி…

கோபப்பட்ட இளைஞரின் கொலை வெறி…

கோபப்பட்ட இளைஞரின் கொலை வெறி… post thumbnail image
அமெரிக்காவின் ஒக்லகோமா நகரை சேர்ந்த வாலிபர் வால்கேர்(வயது 22). வால்கேர் தனது பெண் தோழியின் 5 மாத குழந்தையை சம்பவத்தன்று பார்த்துக் கொண்டுள்ளார். அப்போது டி.வி.யில் கால்பந்து போட்டி ஒளிபரப்பாகியது.

வால்கேர் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருந்த போது குழந்தை அழுதுள்ளது. இதனால் கோபம் அடைந்த அவன் குழந்தையை உயரமாக தூக்கி கிழே போட்டுள்ளான். இதனால் குழந்தையின் காது வழியாகவும், தலையிலும் இரத்தம் கொட்டியுள்ளது. பின்னர் நான்கு மணி நேரம் கழித்து குழந்தையை பார்த்துள்ளனர். இரத்த காயங்களுடன் இருந்த குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் வால்கேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி