எந்தப் போட்டித் தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கூறியுள்ளார்.
சரியாக எழுதிய பதில்களுக்கான மதிப்பெண்ணை ஏன் குறைக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி மகாதேவன். கனடா, அமெரிக்கா போன்ற முன்னேறிய நாடுகளின் தேர்வுகளில் கூட நெகட்டிவ் மார்க் இல்லை என்று மனுதாரர் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளிக்கும் போது, இவ்வாறு கூறியுள்ளார் நீதிபதி.
எனவே, எந்த போட்டி தேர்விலும் நெகட்டிவ் மதிப்பெண் கணக்கிடக் கூடாது என்று நீதிபதி மகாதேவன் கூறினார்.
முன்னதாக, 2013ல் IIT தேர்வெழுதிய மாணவர் பிரதான தேர்வில் 50க்கு 47 எடுத்ததால் அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை என வழக்கு தொடரப் பட்டிருந்தது.