சீன அரசாங்கம், கிறிஸ்தவ தேவாலயங்களில் தொடர்ச்சியாக தேச விரோத கருத்துகள் பகிரப்படுவதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து எல்லா தேவாலயங்களையும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர முடிவு செய்தது..
இதையடுத்து எல்லா சர்ச்சுக்கும், cctv பொருத்த அனுமதி கேட்டு நோட்டிஸ் அனுப்பியது சீன அரசாங்கம்.. இதற்கு சில சர்ச்சுகள் அனுமதியளிக்க, சில எதிர்த்தன..
அரசாங்கம் பதிலளிக்க அளித்த காலக்கெடு முடிந்ததும் எந்த சர்ச்சுகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்ததோ, அந்த சர்ச்சுகள் எல்லாம் இடித்து தரைமட்டமாக்கப் படுகிறது.. அதை விட முக்கியமானது, அப்படி இடிக்க ஆகும் செலவை அந்த சர்ச் நிர்வாகத்திடமே வசூலிக்கிறது என்பதுதான்..
இதையடுத்து சில சர்ச்சுகள் தாமாக முன்வந்து, cctv பொருத்திக் கொள்ள அனுமதியளித்தது. அப்படி காலம் கடந்து வந்த சர்ச்சுகளின் சிலுவை அடையாளம் மட்டும் இடித்து அகற்றப்படுகிறது!