தமிழக அரசின் கொரோனா காரணம் காட்டிய கெடுபிடிகளால்… வரலாற்றில் முதல்முறையாக திருவண்ணாமலை கிரிவலப் பாதை காத்தாடுகிறது.
திருவண்ணாமலை தீபத் திருநாள் அன்று ராஜகோபுரம் முன்பு காற்று கூட புக முடியாது. அவ்வளவு மக்கள் நெருக்கம் இருக்கும். ஆனால், இன்று காற்று மட்டுமே உள்ளது. வீதிகள் கலகலப்பாக இன்றி, கலகலத்துப் போயிருக்கிறது.
பக்தர்கள் நடமாட்டம் துளியும் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது கிரிவலப் பாதை! கொரோனா தொற்று நோய்ப் பரவல் அச்சம் காரணமாக, பக்தர்கள் கிரிவலம் வர தடை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
- எஸ்.ஆர்.வி. பாலாஜி, திருவண்ணாமலை