கவிதை கவிதை

இரவுப் பெண்

சீவி சங்காரித்து
அலுவலக்ம் போக ஏகம் பேர்
நிற்கும் ரயில் நிலையத்தின்
ஓர் அதிகாலை….

வந்து நிற்கின்றாள்
பெண்ணொருத்தி!.

இரவு தூங்கவில்லையென
அந்தப் பெண்ணின் கண்கள் சொல்லுகின்றன
அதிகம் உழைத்தை அவள் சோர்வு சொல்லுகின்றன

நீங்கள் தவறாக யூகம் செய்யாதீர்
அவள் கால்சென்டரில் வேலை செய்யும்
கன்னிப்பெண்!

வருங்கால தமிழகமே

மகனுக்கு சொத்துன்னு
படிக்க வைச்சதை பார்த்திருக்கேன்
பேங்குல பணம் போட்டதை பார்த்திருக்கேன்
வீடு கட்டறத பார்த்திருக்கேன்
கோட்டையே கட்டி கொடுத்த தகப்பனை
இப்பதானே பார்க்கறேன்!

மனித பட்டாம்பூச்சி

கை கால் முளைத்த பட்டாம்பூச்சிக்கு
கல் குத்தும் போது வலிக்குமென
கவலை கொண்டேன்
ஆனால்…
அவளது பாதங்கள் பட்டு
கற்களெல்லாம் பூக்களாக மாறிப்போனது!.

2 comments on “கவிதை கவிதை

  1. venkat சொல்கிறார்:

    //மகனுக்கு சொத்துன்னு
    படிக்க வைச்சதை பார்த்திருக்கேன்
    பேங்குல பணம் போட்டதை பார்த்திருக்கேன்
    வீடு கட்டறத பார்த்திருக்கேன்
    கோட்டையே கட்டி கொடுத்த தகப்பனை
    இப்பதானே பார்க்கறேன்!\\

    supper

பின்னூட்டமொன்றை இடுக