“நான் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பதால்…” – நரேன்!

நடிகர் நரேன் முதல் படம் தொட்டு இன்றுவரை தனது படங்களை தேர்வு செய்வதில் மிகுந்த சிரமம் எடுத்து, கூடுதல் கவனம் செலுத்தி நடிப்பவர் என பெயர் பெற்றவர். அப்படி வந்தது தான் ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’ மற்றும் ‘முகமூடி’. இதற்கு இடையில் சிறிய சறுக்கல்கள் இருந்தாலும், பெரும்பாலும் நல்ல படங்களில் பணியாற்றி தனது பணியை திறம்பட செய்வதில் நரேன் வல்லவர். சமீபத்தில் வெளியான ‘கத்துக்குட்டி’ படமும் அந்த வகையே.

இதனை தொடர்ந்து நரேன் தற்போது நடித்துவரும் படம் ‘ரம்’. இந்தப் படத்தை பற்றி அவர் கூறுகையில், “இதுவே நான் நடிக்கும் முதல் ஹாரர் படம் என்பதால் பெரும் மகிழ்ச்சியுடன் இந்த படத்தில் கலந்து கொண்டேன். இந்த படத்தில் அனுபவம் வாய்ந்த  நடிகர் விவேக் நடிக்கிறார். அவருடன் நான் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவதோடு பெருமையும் அடைகிறேன்.

“இந்த படம் நிச்சயம் ரசிகர்களை திகில் பயத்தில் உறைய வைக்கும். அது உறுதி. புதிய அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வாரி வழங்கும். அனிருத்  இசையமைப்பு என்றாலே படத்துக்கு ஒரு கெத்து   வந்துவிடும். அந்த வகையில் அவருடைய இசையமைப்பில் நான் நடித்து இருப்பதில் எனக்கு பெருமையே” என்றார்.

‘மசாலா படம்’  படத்தை தயாரித்த ஆல் வின் பிக்சர்ஸ் தயாரிக்க,  சாய் பாரத் இயக்க, புதுமுகம்   ஹ்ரிஷிகேஷ், ஷெட்டி, மியா ஜார்ஜ் நடிக்க, இவர்களுடன் விவேக், நரேன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.