ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்து

இன்று புதிய முதலமைச்சராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலக அறைக்குச் சென்று, முதல்வராக 5 கோப்புகளில்  கையெழுத்திட்டார். அவை:-.

  1. கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு கருணாநிதி பிறந்த நாளில் ரூ.4000 என அறிவிக்கப்பட்டிருந்தது. அதை முதல் தவணையாக மே மாதத்திலேயே ரூ.2000 -ஐ குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கும் அரசாணை. இதன்படி 2 கோடியே, 7 லட்சத்து 66000 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர்.
  2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறகு அது இந்த மாதம் 16 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருகிறது.

3.மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் நாளை முதல் அமல்.

4.உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற திட்டத்தின் கீழ் தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வுக்காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கப்படுகிறது. இதற்காக ஐஏஎஸ் அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்படுகிறார்.

  1. கரோனா சிகிச்சைப்பெறுவோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.

மேற்கண்ட 5 கோப்புகளில் முதல்வர் முதல் கையெழுத்தாக   போட்டார்..