ஊடகங்கள் தூக்கிவிட்ட போலி போராளி ஜூலி!

ஜூலி என்ற பெண்ணை தூக்கிவைத்துக் கொண்டாடிய முகநூல் கூட்டம் தான் இப்போது திட்டத் தொடங்கியுள்ளது.

இனவிடுதலைக்காக தீக்குளித்த செங்கொடியைவிட,

நான்கரையாண்டுகளாய், தன் தந்தையோடு மது ஒழிப்பிற்காக 50 முறைக்கு மேல் சிறை சென்ற சட்டக்கல்லூரி மாணவி நந்தினியைவிட,

கல்வி உரிமைக்காக போராடி, வீதியில் நிர்வாணப்படுத்தப்பட்ட எண்ணற்ற சகோதரிகளைவிட,

எந்த வகையில் ஜூலி போராளி ஆனார்?

ஒன்றை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். எவனொருவனின் போராட்டம் ஊடகத்தால் மறைக்கப்படுகிறதோ அவனே போராளி!

எவனை(ளை) ஊடகம் தாங்கிப் பிடிக்கிறதோ அவன்(ள்)  கைக்கூலி!

(படித்ததில் பிடித்தது)