பண மதிப்பிழப்பு பிரச்சனை பற்றி பாரதிராஜா இயக்கும் படம்: படப்பிடிப்பு துவங்கியது!

‘நவம்பர் 8, இரவு 8 மணி’ என்று பெயரிடப்பட்ட புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார் பாரதிராஜா. விதார்த் கதாநாயகனாக ந்டிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

கடந்த நவம்பர் 8ஆம் தேதி இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி தொலைக்காட்சியில் தோன்றி, “ரூ. 1000, 500 நோட்டு இன்று நள்ளிரவு முதல் செல்லாது” என்ற அறிவிப்பை திடுதிப்பென வெளியிட்டார். எனவே, பாரதிராஜா இயக்கும் ‘நவம்பர் 8, இரவு 8 மணி’ படத்தின் கதை, பண மதிப்பிழப்பு பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சென்னை மற்றும் புதுச்சேரியில் படமாக்கப்படும் இந்தப் படத்தில் வயதான கதாபாத்திரம் ஒன்றில் பாரதிராஜாவே நடிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. ரத்னகுமார் கதையில் உருவாகும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்புண்டு என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.